ஜோதிடசாஸ்திரத்தின்படி நவகிரகங்களின் தலைவனாக, ஆன்ம காரகனாக சூரிய பகவான் விளங்குகிறார். ஒருவருடைய வீரம், அதிகாரம், புகழ் மற்றும் ஆற்றலுக்கு சூரியனின் பலமே அடிப்படையாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு அனைத்து ராசிகளிலுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சிலருக்கு இது யோகமாக அமைந்தாலும், சில ராசியினருக்கு கஷ்ய காலமாக மாறுகிறது.
அந்த வகையில், கடந்த மே 15 ஆம் தேதி சூரிய பகவான் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்குள் பிரவேசித்தார். வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை அவர் இதே ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்த சூரிய பெயர்ச்சியால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு கடுமையான கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய அந்த 3 ராசிகள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்.