Weekly Rasi Palan: கடக ராசி நேயர்களே, இந்த வாரம் ஏழ்மை நீங்கி பனமழையில் நனையப் போறீங்க.!

Published : Nov 10, 2025, 04:19 PM IST

Kadaga Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
வார ராசிப்பலன்கள் - கடகம்

கடக ராசி நேயர்களே, உங்கள் ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதால் நேர்மறையான பலன்களை கொடுக்க இருக்கிறார். சூரிய பகவான் நான்காம் வீட்டில் பலவீனமான நிலையில் சஞ்சரிப்பதால் தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படலாம். சுக்கிரனின் செல்வாக்கு காரணமாக சாதகமான பலன்கள் கிடைக்கலாம். பிள்ளைகளின் விஷயத்தில் நல்ல அனுகூலம் காணப்படும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கு தேவையான வாய்ப்புகள் கிடைக்கும். முந்தைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் புதிய முதலீடுகளுக்கு சாதகமானது. இருப்பினும் நம்பிக்கையானவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. எதிர்பாராத செலவுகளால் ஏற்பட்ட நிலைமை மாறி பண மழையில் நனைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

ஆரோக்கியம்:

பரபரப்பான வேலைப்பளு காரணமாக சோர்வாக உணரலாம். ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும் பொது இடங்களுக்குச் செல்லுதல் அல்லது மாடிப்படிகளில் கீழே இறங்குதல் போன்ற சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பது, இரவில் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. மன அமைதிக்கு யோகா, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள்.

கல்வி:

மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக இருக்கும். கல்வியில் நல்ல செய்திகள் கிடைக்கும். உயர் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரம்:

வேலைத்துறையில் நீங்கள் விரும்பிய வெற்றியை அடைவீர்கள். வேலையில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மேல் அதிகாரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் மாறி, சுமூகமான சூழல் நிலவும். சக ஊழியர்களுடன் அளவாக பேசுவது நல்லது. நிர்வாகத்தைப் பற்றிய விமர்சனங்கள் கூடாது. தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

குடும்ப உறவுகள்:

இன்று குடும்ப உறவுகள் இணக்கமாக காணப்படும். காதல் மேம்படும். அன்புக்குரியவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினர் மற்றும் வீட்டில் உள்ளவர்களுடன் நெருக்கம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் சமநிலையை பராமரிப்பது முக்கியம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு இருப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் புரிதல் அதிகரிக்கும்.

பரிகாரம்:

வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வில்வ இலைகள் சமர்ப்பித்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும். முதியோர் இல்லங்கள் அல்லது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நேர்மறை பலன்களைக் கூட்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories