Medicines: வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் மருந்துகளைத் தவறான இடங்களில் வைப்பது எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, உடல்நலக் குறைபாடுகளையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.
நம் வீட்டில் இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் உண்டு. அந்த வகையில், உடல்நலத்தை மேம்படுத்த நாம் பயன்படுத்தும் மருந்துகளைத் தவறான இடங்களில் வைக்கும்போது, அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்துவிடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது குடும்ப உறுப்பினர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். உடல்நலத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, குடும்பத்தினர் அடிக்கடி நோய்வாய்ப்பட இதுவே காரணமாகிவிடும். அதனால், வீட்டில் சில இடங்களில் மருந்துகளைத் தவறிகூட வைக்கக் கூடாது.
25
பூஜை அறை
தெய்வங்கள் உறைவிடமான பூஜை அறையிலும் மருந்துகளை தவறியும் வைக்கக் கூடாது. அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பூஜை அறையிலிருந்து தள்ளி, சுத்தமான மற்றும் தனி அலமாரியில் மருந்துகளை வைப்பதுதான் சிறந்தது. முடிந்தால், வீட்டின் வடகிழக்கு திசையில் உள்ள அலமாரியில் அவற்றை ஒழுங்காக வைக்கலாம் என வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
35
சமையலறை
வாஸ்து சாஸ்திரத்தின்படி, சமையலறை என்பது அன்னை அன்னபூரணி வாசம் செய்யும் மிகவும் புனிதமான இடமாகும். இங்குதான் நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவு தயாராகிறது. ஆகையால் சமையலறையில் மருந்துகளை வைப்பது நல்லதல்ல. அப்படி வைத்தால், அது வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
பலரும் இரவு தூங்குவதற்கு முன் மாத்திரை சாப்பிட வசதியாக, படுக்கைக்கு அருகிலோ அல்லது தங்களின் தலையணைக்கு அடியிலோ மாத்திரைகளை வைத்துக் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். வாஸ்துப்படி இது முற்றிலும் தவறானது. படுக்கைக்கு அருகில் மருந்துகளை வைப்பது கடுமையான மன அழுத்தம், தூக்கமின்மை, பதற்றம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
55
பணப் பெட்டி அல்லது பீரோ
வீட்டில் பணம், நகை வைக்கும் லாக்கர் அல்லது அலமாரிகளில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம். இந்த இடங்களில் மருந்துகளை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தில் அசுபமாக கருதப்படுகிறது. இது தேவையற்ற செலவுகளை, குறிப்பாக மருத்துவச் செலவுகளை அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.