ஜோதிடக் கணிப்புகளின்படி, கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன் ஆகஸ்ட் 22ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். ஏற்கனவே சிம்மத்தில் சூரியனும் கேதுவும் சஞ்சரித்து வருவதால், இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை உருவாகியுள்ளது. இந்த கிரக நிலை செப்டம்பர் 7ஆம் தேதி வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. அதன்பிறகு புதன் கன்னி ராசிக்கு நகர்கிறார்.
புதன் அறிவு, பேச்சுத்திறன், வியாபாரம், கணக்கீடு மற்றும் சிந்தனையை குறிக்கிறார். சூரியன் தன்னம்பிக்கை, அதிகாரம், தலைமைப் பண்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவர். கேது எதிர்பாராத மாற்றங்கள், குழப்பம் மற்றும் உள்ளார்ந்த சிந்தனைகளைக் குறிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த மூன்று கிரகங்களின் கூட்டணி ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, தொழில், பணியிடம், உறவுகள் மற்றும் முக்கிய முடிவுகளில் சில ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழல் உருவாகலாம். அந்த வகையில், இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.
Baba Vanga Prediction: ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பாபா வங்காவின் கணிப்பு இதோ