கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கையால், ஏப்ரல் 2 வரை சில ராசிக்காரர்களுக்கு குடும்ப மற்றும் தாம்பத்ய வாழ்வில் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே அவர்கள் பொறுமையுடனும், புரிதலுடனும் செயல்பட வேண்டியது அவசியம் என ஜோதிடம் எச்சரிக்கிறது.
கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் ராகு இணைந்து பயணம் செய்யும் இந்த காலகட்டம், சில ராசிக்காரர்களுக்கு குடும்பம் மற்றும் தாம்பத்ய வாழ்க்கையில் சின்னச் சின்ன சிக்கல்கள் ஏற்படுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஏப்ரல் 2 வரை இந்த கிரக நிலை தாக்கம் இருக்கும்.
27
மாங்கல்ய தோஷம்
இந்த இணைவு காரணமாக ‘மாங்கல்ய தோஷம்’ போன்ற பாதிப்பு சிலருக்கு என நம்பப்படுகிறது. இதனால் மனஅழுத்தம், கருத்து வேறுபாடு, மற்றும் உறவில் தூரம் போன்ற நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த நாட்களில் பொறுமையும் புரிதலும் முக்கியம்.
37
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சற்று கவனமாக இருக்க வேண்டியதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறிய விஷயங்களிலும் கருத்து வேறுபாடு. சிலருக்கு தற்காலிக பிரிவு அல்லது உடல்நலக் குறைவு போன்ற விஷயங்களும் நிகழலாம்.
சிம்மம் ராசிக்காரர்கள் உறவுகளில் மெதுவாக நடந்து கொள்ள வேண்டும். கோபம் அதிகரிக்கும் சூழல் இருக்கும். உறவினர்களால் கூட பிரச்சனைகள் உருவாகலாம். வாகன பயணங்களில் கவனம் அவசியம்.
57
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் பதட்டம் அதிகரிக்கலாம். சின்ன விஷயமே பெரிய பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நபர்களின் வெளிப்புற பேச்சால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
67
மகரம் மற்றும் கும்பம்
மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் பேசும் விதத்தில் கவனம் தேவை. திடீர் கோபம் உறவுகளை பாதிக்கலாம். பணம் மற்றும் குடும்ப விஷயங்களில் சச்சரவுகள் வரலாம். அமைதியாக அணுகினால் பல பிரச்சனைகள் தானாக சரியாகும்.
77
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு மன அமைதி சற்றுக் குறையக்கூடும். உறவுகளில் புரிதல் குறைவு, பிடிவாதம் போன்றவை பிரச்சனையை அதிகரிக்கலாம். இந்த காலத்தில் சமரச மனப்பான்மையுடன் நடந்துகொண்டால் தாம்பத்ய வாழ்க்கையில் அமைதி நிலைக்கும்.