ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தளபதியாகப் போற்றப்படும் செவ்வாய் பகவான், தைரியம், வீரம், தன்னம்பிக்கை மற்றும் நிலம், கட்டிடங்களுக்கு உரிய காரணியாக விளங்குகிறார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். பொதுவாக செவ்வாய் பகவான் சுமாா் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 18 அன்று செவ்வாய் பகவான் சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் பிரவேசித்துள்ளார்.
கடக ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்றாலும், அதே ராசியில் தேவகுருவான குரு பகவான் அமர்ந்திருப்பதால் 'குரு-மங்கள யோகம்' உருவாகியுள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கை மற்றும் இடமாற்றம் அனைத்து ராசிகளிலுமே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பான சில ராசிக்காரர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் நன்மைகளைத் தரவுள்ளது. குறிப்பாக, நீண்ட நாட்களாகக் கனவில் இருந்த சொந்த வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் சில ராசிக்காரர்களைத் தேடி வரப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.