
Sani Peyarchi Palan 2025 Makara Rasi : மகர ராசிக்கு கடந்த ஏழரை ஆண்டுகளாக அடைந்து வந்த துன்பம் மற்றும் அளவற்ற கஷ்டங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி விடிவுகாலம் பிறக்க போகிறது. ஆம், 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி உங்களுக்கு ஏராளமான நல்ல பலன்களை அள்ளி அள்ளி கொடுக்க போகிறது. சனியைப் போன்று கெடுப்பவரும் இல்லை, சனியைப் போன்று கொடுப்பவரும் இல்லை.
இதுவரையில் பட்ட கஷ்டங்களுக்கு வட்டியும் முதலுமாக சேர்ந்து பலனை கொடுக்க போகிறார். ஏழரை சனி முழுவதுமாக உங்களை விட்டு விலகும் காலம் நெருங்கிவிட்டது. ஆனால், 2025 சனி பெயர்ச்சிக்கு முன்னதாகவே அதற்கான பலன்களை சனி பகவான் உங்களுக்கு கொடுக்க தொடங்கியிருப்பார். இதனை நீங்கள் கண்கூடா பார்த்திருக்கலாம். மகர ராசியினர் புதிய வீடு வாங்கி நீண்ட நாட்களாக கிரகபிரவேசம் செய்யாமல் இருந்திருப்பீர்கள். இந்த மாதம் கிரகபிரவேசம் செய்திருப்பீர்கள்.
அடுத்த மாதமோ, அதற்கடுத்த மாதமோ வாண்டி, வாகனம் வாங்கும் யோகம் தேடி வரலாம். புதிய வேலைக்கு முயற்சித்திருந்தால் வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகம் கூட தேடி வரலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். இப்படி எல்லா வகையான பலன்களும் கிடைக்க பெறுவீர்கள். சனி பகவான் இனி உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்வார்.
மகர ராசியினருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த ஏழரை காலம் முடிவுக்கு வருகிறது. இந்த ஏழரை ஆண்டுகளில் சொந்த பந்தங்களிலிடையே பிரச்சனை வந்திருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். இடம் விட்டு இடம் மாறி சென்றிருப்பீர்கள். அவமானம் நிறைய ஏற்பட்டிருக்கும். இன்னும் பல சொல்ல முடியாத கஷ்டங்களை கூட கடந்து வந்திருப்பீர்கள். இனிமேல் அதற்கு வேலையே கிடையாது. எல்லாமே நல்லதாகவே நடக்கும்.
ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் நின்று அவர்கள் செய்த பாவ, புண்ணியம், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார். அப்படி தான் சனி பகவான் மகர ராசியினருக்கு கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களுக்கு பலன்களை கொடுத்து வந்தார். ஆனால், வரும் 2025, மார்ச் 29 ஆம் தேதி முதல் உங்களுக்கு நல்ல காலம் வந்தாச்சு.
ராஜயோகம்:
2025 ஆம் ஆண்டு மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் சனி பகவான் 2027 ஜூன் 3 ஆம் தேதி வரையில் மீன ராசியிலேயே இருப்பார். இதற்கிடையில் குறிப்பிட்ட மாதங்கள் வக்ரம் அடைந்து அதன் பிறகு வக்ர நிவர்த்தி அடைவார். மற்றபடி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தான் சனி பெயர்ச்சி நிகழும். 2025 சனி பெயர்ச்சி உங்களது ராசிக்கு 3ஆம் இடமான மீன ராசிக்கு செல்கிறார். சனி பகவான் 3, 6 மற்றும் 11 ஆகிய இடங்கள் ராஜ யோகத்தை தரக் கூடியவர்.
வேலை:
இனிமேல் உங்களது வாழ்க்கை முன்னேற்ற பாதையில் தான் செல்லும் என்ற நிலையில் வேலை, தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால் இதுவரையில் இருந்த தடை, தாமதங்கள் இனி இருக்காது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களால் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். எப்போதும் உங்களுக்கு வளர்ச்சி தான். சொந்தமாக பிஸினஸ் செய்ய கடனுதவியும் கிடைக்கும். அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்.
பொருளாதாரம்:
மகர ராசியினருக்கு ஏழரை முடியும் நிலையில் நிதிநிலை சீராகும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி லாபம் ஈட்டுவீர்கள். முதலீடு செய்யும் எண்ணம் மேலோங்கும். செலவு குறையும், வருமானம் அதிகரிக்கும். காசு, பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். சனி பகவான் கொடுத்துக் கொண்டே இருப்பார். கடன்களை திருப்பி செலுத்துவீர்கள். இனி உங்களுக்கு கடனே இருக்காது என்று சொல்லும் அளவிற்கு வருமானம் அதிகரிக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும், வண்டி, வாகனம், வீடு, நிலம் என்று வாங்கி மகிழ்வீர்கள். ஏழரையில் இழந்த எல்லாவற்றையும் திரும்ப பெறும் காலகட்டம் வந்தாச்சு.
குடும்பம், திருமணம்:
புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக 2ஆவது குழந்தைக்கு முயற்சி செய்பவர்களுக்கு 2ஆவது குழந்தைக்கான யோகம் உண்டாகும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்வார்கள். எதிரிகள் தொல்லை இனி இருக்கவே இருக்காது. குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சகோதர, சகோதர்களின் ஒற்றுமை மேலோங்கும். காதல் கைகூடும். மகன் அல்லது மகளுக்கு திருமணம் நடக்கும். உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை கிடைக்க பெறுவீர்கள். பெரிய இடத்து சம்பந்தம் கிடைக்கும்.
கல்வி:
மாணவர்கள் புத்திச்சாலியாகவும், திறமைசாலியாகவும் விளங்குவார்கள். தேர்வில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு அமோகமான காலகட்டம். வெளிநாட்டிற்கு சென்று படிப்பீர்கள். அரசு தேர்வுகளில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவீர்கள். கவனமாக படித்தால் கல்வியில் நீங்கள் தான் ராஜா. இந்த காலகட்டம் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
உடல் ஆரோக்கியம்:
நீண்ட நாட்களாக தீராத நோய் கூட தீரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ செலவு குறையும். தியானம் மற்றும் யோகா செய்யும் எண்ணம் வரும். உடற்பயிற்சி செய்வீர்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மன நிம்மதி உண்டாகும். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கையை சனி பகவான் ஏற்படுத்தி கொடுப்பார்.