ஜோதிட சாஸ்திரத்தில் கேது பகவான் 'ஞான காரகன்' என்றும் 'மோட்ச காரகன்' என்றும் அழைக்கப்படுகிறார். பொதுவாகக் கேது என்றாலே தடை, நஷ்டம், விரயம் என்று அஞ்சுபவர்கள் உண்டு. ஆனால், கேது பகவான் சுப ஸ்தானங்களைப் பார்க்கும்போதோ அல்லது சுப கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையோடு பொருந்தும்போதோ, ஒருவரை எவராலும் அசைக்க முடியாத கோடீஸ்வர நிலைக்கு உயர்த்தும் வல்லமை படைத்தவர்.
குறிப்பாக, எதிர்பாராத சொத்துச் சேர்க்கை, ஆன்மீக வழி முன்னேற்றம், வெளிநாட்டு யோகம் மற்றும் புதையல் போன்ற திடீர் அதிர்ஷ்டங்களைத் தருவதில் கேதுவுக்கு நிகர் கேதுவே. தற்போது ஏற்படவுள்ள கேதுவின் சுப பார்வையால், 5 குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குத் திடீர் கோடீஸ்வர யோகமும், சொத்து, சுக சேர்க்கையும் அமையவுள்ளது.