சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோளாக விளங்கும் குரு பகவான், ஜோதிடத்தில் மங்களகரமான கிரகங்களின் தலைவராகக் கருதப்படுகிறார். அறிவு, செல்வம், ஆன்மீகம், உயர்வு மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் சக்தி கொண்ட குருவின் நிலை, ஒருவரின் ஜாதகத்தில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால், வாழ்க்கையில் முன்னேற்றமும் வளமும் அதிகரிக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான், ஆகஸ்ட் 14 அன்று கடக ராசியில் உதயமாக உள்ளார். இந்த உதயம் பலரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அதன் பின்னர் அக்டோபர் 31 அன்று குரு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைவார். குறிப்பாக குருவின் இந்த உதயம் சில ராசிக்காரர்களுக்கு செல்வம், தொழில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் காலமாக அமையும் என்று கூறப்படுகிறது.