Astrology : காக்கா கத்துனா விருந்தினர்கள் வருவார்களா? அது நல்லதா? கெட்டதா?

Published : Jun 03, 2026, 04:11 PM IST

Astrology : நம்ம ஊரில் காகத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் இருக்கின்றன. சனாதன தர்மத்தின்படி, ஒரு காகம் வீட்டில் அமர்வது அல்லது கரைவது நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தும், அதேநேரம் கெட்ட விளைவுகளையும் உண்டாக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

PREV
14
கூரையின் மேல் காக்கை
ஒரு காகம் உங்கள் வீட்டு பால்கனி அல்லது கூரை மேல் அமர்ந்து கரைந்தால், வீட்டுக்கு உறவினர்கள் வரப்போகிறார்கள் என்று அர்த்தம். அதுவே, வடக்கு அல்லது கிழக்கு திசையைப் பார்த்து இனிமையாகக் கரைந்தால், வேலையில் முன்னேற்றமும், பணவரவும் அதிகரிக்கும்.
24
காகம் வீட்டிற்குள் வந்தால்?

காகத்தை யமதர்மனின் தூதர் மற்றும் சனி பகவானின் வாகனமாக கருதுகிறார்கள். ஒருவேளை காகம் வீட்டிற்குள் வந்து அமர்ந்தால், வரவிருந்த பெரிய ஆபத்து விலகிவிட்டது என்று பொருள். காகத்திற்கு சாதம் அல்லது இனிப்பு வைத்தால், முன்னோர்களின் ஆசி கிடைத்து, தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை.

34
அபசகுனம்
ஒரு காகம் வீட்டு மொட்டை மாடியில் தெற்கு திசையை நோக்கி அமர்ந்து, தொடர்ந்து கடுமையாகக் கரைந்தால், அது அபசகுனம். இது குடும்பத்தில் யாருக்காவது கெட்ட செய்தி அல்லது உடல்நலக்குறைவு வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம். பறக்கும் காகம் திடீரென ஒருவர் தலையில் பட்டால், அது பெரிய நெருக்கடியின் அறிகுறி என்பதும் ஒரு பரவலான நம்பிக்கை.
44
துரதிர்ஷ்டம்
வீட்டு முற்றத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ பல காகங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டால், அது குடும்பத்தில் அமைதியின்மை அல்லது சட்டச் சிக்கல்களைக் குறிக்கும். மதிய வேளையில் ஒரு காகம் வீட்டில் அமர்ந்து சிறகுகளை அடித்துக்கொண்டாலோ அல்லது பயத்தில் அலறினாலோ, அது வீட்டிற்கு துரதிர்ஷ்டம் வருவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
Read more Photos on
click me!

Recommended Stories