சிம்ம ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோகத்தால் நல்ல காலம் தொடங்கவுள்ளது. புதன் உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் இடத்திற்கு சஞ்சரிக்க போகிறார். எனவே உங்களது பேச்சுத் திறன் அதிகரிக்கும். இதன் காரணமாக மக்கள் ஈர்க்கப்படுவார்கள். பேச்சு தொடர்பான போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். உங்கள் நிதி நிலை மேம்படும். சமூகத்தில் உங்களுக்கான சொந்த அடையாளத்தை உருவாக்குவீர்கள். சந்தைப்படுத்துதல், மார்க்கெட்டிங், பேச்சு, வங்கி மற்றும் ஊடகங்களுடன் தொடர்புடைய பணிகளில் இருப்பவர்களுக்கு இந்த காலக்கட்டம் மிகவும் சாதகமானதாக அமையும்.