சுக்கிர பகவானால் உருவாகும் மாளவ்ய யோகம், செல்வம் மற்றும் புகழை வழங்கும். இந்த யோகத்தால் ஜூலை மாதம் முதல் 3 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என ஜோதிடம் கூறுகிறது.
ஜோதிடத்தில் சில யோகங்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றும் சக்தி கொண்டதாகக் கருதப்படுகின்றன. அவற்றில் மிகவும் சிறப்பான ஒன்றுதான் மாளவ்ய யோகம். சுக்கிர பகவான் தனது ஆட்சி அல்லது உச்ச ராசியில் இருந்து கேந்திர ஸ்தானங்களில் அமரும்போது உருவாகும் இந்த யோகம், செல்வம், சொத்து, புகழ், ஆடம்பரம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தை வழங்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த யோகத்தின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் பெறப் போகும் 3 ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். அதுவும் இந்த 3 ராசிகளுக்கும் ஜூலை மாதம் முதல் இந்த அதிஷ்டம் தொடங்குகிறது என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
துலாம் ராசிக்கும் சுக்கிரன் அதிபதியாக இருப்பதால், இந்த யோகம் பல நன்மைகளை வழங்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். ஏற்கனவே வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் சூழல் உருவாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகி புதிய வளர்ச்சி பாதை திறக்கும். திருமண வாழ்க்கையில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பண வரவு கிடைக்கலாம். கலை, அழகு, ஃபேஷன் மற்றும் வணிகத் துறையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலமாக அமையும். ஜூனுக்கு பிறகு வரும் இந்த யோகத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் இது துலாம் ராசிகாரர்களை கோடீஸ்வரன் ஆக்குமாம்.
36
ரிஷபம்
மாளவ்ய யோகத்தின் முழு பலனையும் அதிகமாக அனுபவிக்கப் போவது ரிஷப ராசிக்காரர்கள். சுக்கிரன் இந்த ராசியின் அதிபதி என்பதால், பணம் தொடர்பான விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேறக்கூடும். முதலீடுகளில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து ரிஷப ராசிகளுக்கு பணமழை கொட்டகோகிறது என்கின்றனர் ஜோதிடர்கள்.
மகர ராசிக்காரர்களுக்கு மாளவ்ய யோகம் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியடையும். வெளிநாடு தொடர்பான வேலை அல்லது வணிக வாய்ப்புகள் கிடைக்கலாம். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவும் அதிகரிக்கும். கடன் சுமை குறைந்து சேமிப்பு அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஜூலை முதல் தேதியில் இருந்து அதிர்ஷ்ட காற்று அடிக்க போகிறது என்பதால் மகரராசிக்கு லாட்டரி சீட்டு போல அதிர்ஷ்டம் அடிக்க போகிறது.
56
மாளவ்ய யோகத்தின் சிறப்புகள்
மாளவ்ய யோகம் உள்ளவர்களுக்கு வசதியான வாழ்க்கை, செல்வாக்கு, நல்ல உடல்நலம் மற்றும் சமூக மரியாதை கிடைக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இந்த காலத்தில் புதிய முதலீடுகள், தொழில் விரிவாக்கம் மற்றும் சொத்து சேர்க்கை போன்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். அதே நேரத்தில், எந்த வாய்ப்பையும் சரியான திட்டமிடலுடன் பயன்படுத்தினால் மட்டுமே அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். ஜூன் மாதம் முடிந்த பிறகு அதாவது ஜூலை மாத்தில் இருந்து இந்த யோகம் வரவுள்ள நிலையில் திட்டமிட்டு உழைத்தால் முன்னேற்றம் சாத்தியம் எனகிறது ஜோதிட நூல்கள்.
66
சொன்னா நம்பிதான் ஆகனும் மக்களே
மாளவ்ய யோகம் என்பது ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த ராஜயோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ரிஷபம், துலாம் மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஜோதிட பலன்கள் தனிநபரின் முழு ஜாதகம், தசா-புத்தி மற்றும் கிரக நிலைகளைப் பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை பொதுவான ஜோதிடக் கணிப்பாக மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. ஜூனுக்கு பின் அடிக்க போகும் யோகத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டால் இனி கோடீஸ்வரன் லிஸ்டில் உங்கள் இருப்பது உண்மையே.