Ashta lakshmi yoga: அள்ளிக்கொடுக்கும் அஷ்டலட்சுமி யோகம்! 3 ராசிகள் காட்டில் இனி பணமழை.!

Published : Aug 15, 2026, 07:50 AM IST

அஷ்டலட்சுமி யோகத்தின் பலன்களால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பணவரவு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எந்த 3 ராசிகள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
எதிர்பாராத பண வரவு, சமூகத்தில் மிகப்பெரிய புகழ்

அஷ்டலட்சுமி யோகம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் அரிய மற்றும் சக்திவாய்ந்த தன யோகங்களில் ஒன்றாகும். ஜாதகத்தில் செல்வத்தின் அதிபதியான சுக்கிரனும், சுப கிரகமான குருவும் சுப ஸ்தானங்களில் (கேந்திர, கோணங்களில்) பலம்பெற்று அமையும்தோதோ அல்லது ஆட்சி, உச்சம் பெற்று இணையும்போதோ இந்த யோகம் முழுமையாகச் செயல்படுகிறது.

அஷ்டலட்சுமி என்றால் ஆதி லட்சுமி, தானிய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி ஆகிய எட்டு வகையான செல்வங்களின் அருளையும் பெறுவது என்று பொருள். இந்த யோக கால கட்டத்தில் குறிப்பிட்ட சில ராசியினருக்குத் தொழிலில் அசுர வளர்ச்சியும், எதிர்பாராத பண வரவும், சமூகத்தில் மிகப்பெரிய புகழும் கிடைக்கப்பெறும்.

25
ரிஷபம் (சுக்கிரனின் ஆட்சி ராசி)

உங்கள் ராசிநாதனான சுக்கிரன் சுப பலத்துடன் அமைவதால், அடகில் இருந்த சொத்துக்கள் மீளவும், பழைய கடன்கள் முழுமையாக அடைபடவும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் ஸ்தானத்தில் சுப கிரகங்களின் பார்வை பதிவதால் புதிய தொழில தொடங்கும் முயற்சிகள் கைக்கூடும். ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அமோக லாபம் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் போன்ற அசையாச் சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும். தன ஸ்தான பலத்தால் வங்கிச் சேமிப்பு கணிசமாக உயரும்.

35
சிம்மம் (சூரியனின் ராசி)

குரு மற்றும் சுக்கிரனின் சுப சேர்க்கை உங்கள் ராசிக்கு சுப பலன்களை அள்ளித்தரும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் நீண்ட நாட்களாக இருந்த தடைகள் விலகி வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். பூர்வீகச் சொத்து வழியில் இருந்த வில்லங்கங்கள் தீர்ந்து, கைக்கு வர வேண்டிய தொகைகள் தடையின்றி வந்து சேரும்.

45
தனுசு (குருவின் ஆட்சி ராசி)

ராசி அதிபதி குருவின் பரிபூரண அருளால் அஷ்டலட்சுமி யோகத்தின் முழுப் பலன்களையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகிறது. பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் புதிய முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தொழில் விரிவாக்கத்திற்குத் தேவையான மூலதனம் தடையின்றி கிடைக்கும்.பாக்கிய ஸ்தானம் பலப்படுவதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். கஜ லட்சுமியின் அருளால் லக்ஷ்மி கடாட்சமும், கடன் இல்லா நிம்மதியான வாழ்க்கையும் அமையும்.

55
ஜோதிட ரீதியான எளிய பரிகாரங்கள்

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி அஷ்டோத்திர ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், நெய் தீபமேற்றி வழிபாடு செய்வதும் யோக பலன்களை இரட்டிப்பாக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கும், குரு பகவானுக்கும் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடலாம். பசுமாட்டிற்கு அகத்திகீரை அல்லது பழங்கள் வழங்குவது அஷ்டலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றுத் தரும்.

Read more Photos on
click me!

Recommended Stories