2026 பிப்ரவரி 23 அன்று செவ்வாய் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. மூன்று ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மற்றும் திடீர் பணவரவு ஏற்படும்.
வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் துணிவு, தைரியம், ஆற்றல், செல்வம் மற்றும் செயல் திறனைக் குறிக்கும் முக்கிய கிரகமாக கருதப்படுகிறது. இந்த கிரகம் தனது ராசியை மாற்றும் போது பலரின் வாழ்க்கையிலும் கனிசமான மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். 2026 பிப்ரவரி 23 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. இந்த மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கம் அளித்தாலும், குறிப்பாக மூன்று ராசிகளுக்கு இது “பொற்காலம்” என தெரியவந்துள்ளது.
25
ரிஷப ராசிக்காரர்கள்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பத்தம் வீட்டில் பயணம் செய்யும். இது தொழில் மற்றும் பதவி உயர்வை குறிக்கும் இடமாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த திட்டங்கள் இப்போது வெற்றி பெறலாம். பூர்வீக சொத்து தொடர்பான நன்மைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூக மரியாதை உயரும்.
35
தனுசு ராசிக்காரர்கள்
இந்த பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்க முடியும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். எங்காவது சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும் சாத்தியம் உள்ளது. வெளிநாட்டு பயணம் அல்லது லாபகரமான குறுகிய பயணங்கள்.
செவ்வாய் உங்கள் லக்னத்தில் பயணம் செய்கிறது. இது உங்கள் செயல் திறனை அதிகரிக்கும். தலைமைத்துவ திறன் வெளிப்படும். திடீர் பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. முதலீடுகள் நல்ல லாபம் தரலாம். திருமண வாழ்க்கை அமைதியாக இருக்கும். மகரம் ராசிக்கும் இது பொருந்தும்.
55
அனுமன் வழிபாடு
செவ்வாய் பலப்பட வேண்டும் என்று செவ்வாய்கிழமை அனுமன் வழிபாடு, சிவப்பு பொருட்கள் தானம் செய்தல் போன்ற பரிகாரங்கள் செய்யலாம்.