நாய் ரமேஷை தீர்த்துக் கட்டிய சுப்ரியா.. அண்ணியை நடுரோட்டில் கூறுபோட்ட மைத்துனர்கள்.. சென்னையில் பயங்கரம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 13, 2021, 12:53 PM IST
Highlights

சுப்ரியாவின் கணவர் ரூபனின் அண்ணன் ரமேஷ் என்கிற நாய் ரமேஷ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் செங்குன்றம் காவாங்கரை பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
 

சென்னை புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக கட்டிய  மனைவியை கணவனே திட்டமிட்டு படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புளியந்தோப்பு குருசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரியா(32) அதே பகுதியில் தள்ளுவண்டி கடையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகனும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சுப்ரியாவின் கணவர் ரூபனின் அண்ணன் ரமேஷ் என்கிற நாய் ரமேஷ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் செங்குன்றம் காவாங்கரை பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். 

அதற்கு சுப்ரியா காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. அன்றுமுதல் சுப்ரியாவை பழிவாங்கும் நோக்கில் இருந்த கணவர் ரூபன் மற்றும் அவரது சகோதரர்கள்  சுப்ரியாவை கொலை செய்ய நேரம் பார்த்து திட்டம் தீட்டி கொண்டு இருந்த நிலையில் நேற்று மாலை குருசாமி நகர் 9வது தெரு அருகே உள்ள சாலையோர கடையில் சுப்ரியா உணவு உட்கொண்டு இருந்தபோது அங்கே வந்த ரூபனின் சகோதரர்கள் சுப்ரியாவை தனியே அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறைந்திருந்த ரூபனின் சகோதரர்கள் சுதா என்கிற சுதாகர், பிரேம்குமார் மற்றும் ராம்கி என்கிற ராம்குமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் தலை, கை கால்கள் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சுப்ரியா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.உடலை கைப்பற்றி அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பேசின்பிரிட்ஜ் காவல் நிலைய போலீசார். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பான குடியிருப்புகளுக்கு நடுவே காய்கறி விற்று கொண்டிருந்த பெண்ணை ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!