நள்ளிரவில் முனங்கல் சத்தம்.. கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர் எடுத்த விபரீத முடிவு

By vinoth kumarFirst Published Feb 16, 2020, 1:35 PM IST
Highlights

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது 45 வயதான மனைவி மாரியம்மாளுக்கும், எதிர்வீட்டில் வசித்த திருமணம் ஆகாத 28 வயது இளைஞர் ராமமூர்த்தி என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இது அரசல் புரசலாக சண்முகத்தின் காதிலும் விழ, மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்கவில்லை.

கோவில்பட்டி அருகே நள்ளிரவில் கணவர் தூங்கிக்கொண்டிருந்த போது பக்கத்துக்கு அறையில் கள்ளக்காதலுடன் வெறித்தனமாக உல்லாசமாக இருந்த மனைவியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது 45 வயதான மனைவி மாரியம்மாளுக்கும், எதிர்வீட்டில் வசித்த திருமணம் ஆகாத 28 வயது இளைஞர் ராமமூர்த்தி என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இது அரசல் புரசலாக சண்முகத்தின் காதிலும் விழ, மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்கவில்லை.

இதையும் படிங்க;-  https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/school-teacher-harassment-q28uvq

இந்நிலையில், நேற்றிரவு தனது வீட்டின் ஒரு அறையில் சண்முகம் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை பக்கத்து அறையில் வித்தியாசமான முனங்கல் சத்தம்  கேட்டிருக்கிறது. எழுந்து வந்து பார்த்தபோது, மனைவி மாரியம்மாள், ராமமூர்த்தியுடன் கட்டிலில் இருவரும் வெறித்தனமாக உல்லாசமாக இருப்பதை கண்டு கணவர் அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கணவர் சண்முகம் அரிவாளை எடுத்து ராமமூர்த்தியை தலையை வெட்டி துண்டித்து கொலை செய்ததுடன், மாரியம்மாளையும் வெட்டியுள்ளார். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். 

இதையும் படிங்க;-  செடி புதருக்குள் இருந்து வரும் முனங்கல் சத்தம்... காதலர்களுக்கு படுக்கை அறையாக மாறிய வண்டலூர் பூங்கா..!

இதையடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரிடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கணவர் சண்முகத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!