என்கவுண்ட்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம் !! கொண்டாடித் தீர்த்த தெலங்கானா மாணவிகள் !!

By Selvanayagam PFirst Published Dec 6, 2019, 10:07 AM IST
Highlights

பெண் கால்நடை மருத்தவர் பிரியங்கா ரெட்டியை கற்பழித்து எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் நால்வரும் இன்று அதிகாலை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை தெலங்கானவைச் சேர்ந்த மாணவிகளும் பொது மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சேர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். 

விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த இடத்திற்கு இன்று அதிகாலை குற்றவாளிகளை அழைத்து சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டச் செய்தனர். அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதால் 4 பேரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றுள்ளனர்.

இதற்ழ மகிழ்ச்சி தெரிவித்துள்ள பெண் டாக்டரின் தந்தை, என் மகள் இறந்து 10 நாட்கள் ஆகின்றன. குற்றவாளிகள் 4 பேரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதால் எனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும். 4 பேரை சுட்டுக்கொன்ற போலீசாருக்கும், தெலுங்கானா அரசுக்கும் நன்றி கூறுகிறேன் எள தெரிவித்துள்ளார்.


.
இதே போல் 4 குற்றவாளிகளும் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாணவிகள் கல்லூரி பேருந்தில் சென்றபோது சாலையில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரைப்பார்த்து கைகளை  அசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இதே போல் பலரும் இந்த சம்பவத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்

click me!