பள்ளி மாணவியை ஏற்காடுக்கு அழைத்து சென்று உல்லாசம்... சாயங்காலம் ஸ்கூல் வாசலில் ட்ராப்! கேடுகெட்ட மோகன்ராஜ் பற்றி விசாரணையில் பகீர்

By sathish kFirst Published Sep 28, 2019, 5:36 PM IST
Highlights

ஸ்கூலுக்கு போகும் மாணவிகளை கூட விட்டு வைக்கவில்லை. ஒருமுறை ஸ்கூலுக்கு சென்ற பெண்ணை வழியில் தடுத்து நிறுத்தி, 2 பேரும் ஏற்காடுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

சீரியல் ரேப்பிஸ்ட் மோகன்ராஜின் பின்னணியை விசாரித்ததில்; விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆட்டோ தொழிற் சங்க தலைவனான இவன் ஆட்டோவில் பயணித்த ஒரு பெண் , தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு உல்லாசத்துக்கு அழைப்பதாக  போலீசில் புகார் கொடுக்க, அரசியல் செல்வாக்குடன் வலம் வந்த மோகன்ராஜை பிடித்து விசாரித்ததில் இவனுக்கு கல்யாணமான சில மாதங்களிலேயே  இவனின் காம வெறியில் சில்மிஷம் செய்ததில் முதல் மனைவி ஓடிப்போக, பொண்டாட்டி ஓடிப்போன நிலையில் தனது நண்பனின் போனபோது நண்பனின் மனைவி மீது வந்த ஆசையால் 2 வது தாரமாக அவரது மனைவியையும் மயக்கி கல்யாணம் செய்து கொண்டார். 

ஆனால் இவனின் காம வெறிக்கு ஈடு கொடுக்க முடியாக அந்த பெண்ணும் பெண்ணும் பிரிந்து சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து பல பெண்களை சீரழித்ததை அடுத்து தற்போது வெளியான வீடியோவில் மோகன்ராஜ் ஒரு பெண்ணை  கட்டிலில் பலவந்தமாக பிடித்து தள்ளி.. மிரட்டி.. பணிய வைத்து.. பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றும் வீடியோமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  

இந்த வீடியோ குறித்துகூட போலீசார் இவரிடம் விசாரிக்கையில் உல்லாசம் அனுபவிக்க கேடுகெட்ட கேவலமான வேலை பார்த்தது தெரியவந்துள்ளது. இவனிடம் ஆட்டோவில் வந்த அந்த பெண்ணின் குடும்ப சூழலை தெரிந்துகொண்டு பணம் தருவதாக ஆசை காட்டி வீட்டிற்கு அந்த அழைத்து வந்தாராம், பயந்து நடுங்கி வந்த அந்த பெண்ணை காட்சிப்பெயரை சொல்லியும், பணம் கொடுத்ததை சொல்லியும் அந்த பெண்ணுக்கே தெரியாமல் மொபைல் கேமராவை ஆன் செய்து வைத்துவிட்டு அந்த பெண்ணை மிரட்டி அடித்து பலவந்தமாக உல்லாசம் அனுபவித்துள்ளான் இந்த மிருகம், இப்படி பல பெண்கள் இதில் சிக்கி உள்ளதால், இவனை பற்றிய செய்தி வந்ததும் பலரும் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்கள். 

இது எல்லாவற்றையும் விட கொடுமை என்னன்னா? மோகன் ராஜின் நண்பன் தான். மோகன்ராஜ் 2 ஆட்டோக்கள் வைத்திருந்து இருக்கிறார். ஒன்று இவர் ஓட்டிக் கொண்டு, இன்னொன்றை அந்த நண்பனுக்கு தந்து ஓட்ட சொல்லி வந்துள்ளான். அந்த நண்பன்தான் இவனை விட கேவலமா கேடுகெட்டவன் ஜென்மம் போல தெரிகிறது. பல பெண்களுடன் வலுக்கட்டாயமாக பேசி தொடர்பை ஏற்படுத்தி, அந்த பெண்களை மோகன்ராஜிக்கு முதலில் விருந்தாக்கிவிட்டு, அதற்குபிறகு இவனும் அந்த பெண்களை தனது ஆசையை தீர்த்துக்கொள்வானாம். 

இவங்க 2 பேரும் ஸ்கூலுக்கு போகும் மாணவிகளை கூட விட்டு வைக்கவில்லை. ஒருமுறை ஸ்கூலுக்கு சென்ற பெண்ணை வழியில் தடுத்து நிறுத்தி, 2 பேரும் ஏற்காடுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அந்த பெண் பிள்ளைகள் சாப்பிட கேட்பதை வாங்கி கொடுத்து, நெருக்கமாக பள்ளி செல்லும் பெண்கள் என கூட பார்க்காமல் இருந்திருக்கிறார்கள். அதன்பிறகு சாயங்காலம் ஆனதும் பள்ளி கூட  வாசலில் கொண்டுவந்து விட்டு போயிருக்கிறார்கள். இதனால் இந்த பெண் பிள்ளைகளும், பெற்றோரும் கலக்கத்தில் உள்ளனர். 

விஷயம் ரொம்ப பெரிதாகி வருகிறது, இதில் மாவட்ட எஸ்பியே நேரடியாக இறங்கி உள்ளார். இது பற்றி முழுமையாக விசாரிக்க சங்ககிரி டிஎஸ்பிக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது. மோகன்ராஜ் வீடு இருக்கும் பகுதி, ஆட்டோ ஸ்டேண்ட் பகுதிகளில் விசாரணை நடந்து வருகிறது. அரசியல் பலத்துடனேயே எந்நேரமும் வலம் வந்ததாகவும் இருந்ததாகவும், பல பெண்களை இப்படி மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் ஒரு சிலர் தெரிவித்துள்ளனர்.  

click me!