பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை தரக்குறைவாக பேசிய தகவல் உரிமை ஆர்வலர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்

Published : May 28, 2023, 08:12 AM ISTUpdated : May 28, 2023, 08:35 AM IST
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை தரக்குறைவாக பேசிய தகவல் உரிமை ஆர்வலர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்

சுருக்கம்

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை தரக்குறைவாக பேசிய தகவல் உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் கிரித் சோமையா ஆகியோரை சமூக ஊடகங்கள் மூலம் தரக்குறைவாகப் பேசியதாக மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சந்தேராய் கிராமத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரை மும்பை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

குலாம் காசி என்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் தனது சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்தி பிரதமர் மோடி மற்றும் பிறருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கிரித் சோமையா என்பவர் சகினாகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார்.

ஏப்ரலில் பிரதமர் மோடி கேரளாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அவர் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் அனுப்பிய ஒருவரை கேரள காவல்துறை கைது செய்த சில வாரங்களுக்குப் பிறகு இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!
திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!