5 மாத கர்ப்பிணி காரில் கடத்தல்... ஒதுக்குபுறமாக தூக்கிட்டுபோய் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள்... கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

Published : Dec 13, 2019, 05:22 PM IST
5 மாத கர்ப்பிணி காரில் கடத்தல்... ஒதுக்குபுறமாக தூக்கிட்டுபோய் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள்... கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

சுருக்கம்

கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா என்ற இளம்பெண் தமது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து ஜெகன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், படம் பார்ப்பதற்காக திரையரங்கத்திற்கு ஜெகனும், ஜெயப்பிரதாவும் சென்றுள்ளனர்.

கடலூர் அருகே 5 மாத கர்ப்பிணியை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா என்ற இளம்பெண் தமது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து ஜெகன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், படம் பார்ப்பதற்காக திரையரங்கத்திற்கு ஜெகனும், ஜெயப்பிரதாவும் சென்றுள்ளனர். 

அப்போது, திருப்பாப்புலியூர் மார்க்கெட் தெருவை சேர்ந்த பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி, பிரபாகரன் ஆகிய 4 பேர், அந்த பெண்ணை கேலி செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ஜெகனையும் தாக்கியுள்ளனர். இதனால், கடும் கோபமடைந்த அந்த பெண் செருப்பை எடுத்து காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 4 பேரும், 5 மாத கர்ப்பிணியான ஜெயப்பிரதாவை காரில் கடத்தி சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, ஆள்கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!