கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கணவனை கொலை செய்த கொடூர மனைவி..!

By vinoth kumarFirst Published Dec 7, 2019, 11:01 AM IST
Highlights

சென்னை திரு.வி.க நகர் கிருஷ்ணா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் உபயதுல்லா (39). இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன் நஸ்ரின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

சென்னையில் குடும்பத் தகராறில் கொதிக்கும் எண்ணெய்யை கணவர் மீது ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திரு.வி.க நகர் கிருஷ்ணா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் உபயதுல்லா (39). இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன் நஸ்ரின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மீண்டும் சண்டை ஏற்பட்டப்போது ஆத்தரமடைந்த நஸ்ரின் அடுப்பில் சூடாக இருந்த எண்ணையை எடுத்து கணவர் மீது ஊற்றியுள்ளார். வலி தாங்க முடியாமல் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, உடல் முழுவதும் வெந்த நிலையில்  உபயதுல்லா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனே அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நஸ்ரினை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உபயதுல்லா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!