கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கு தொல்லை... 5 வருடம் காத்திருக்க சொல்லிவிட்டு மீண்டும் கணவனுடன் சேர்ந்ததால் நடந்த விபரீதம்

By sathish kFirst Published Feb 25, 2019, 2:13 PM IST
Highlights

கல்யாணமான இளம் பெண்ணை காதல் டார்ச்சர் கொடுத்த இளைஞருக்கு மறுப்பு சொன்னதால், கத்தியால் குத்திவிட்டு தப்பிசென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னை ராணி அண்ணா நகரை சேர்ந்தவர் சரண். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் கல்யாணமாகி, 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. சரண்யா கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இதே நிறுவனத்தில் ஓட்டேரி பகுதியை சேர்ந்த சேர்ந்த விக்டர். நிர்வாக பிரிவில் வேலைசெய்து வருகிறார். சரண்யாவுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்த இவர்கள் கடந்த 2 ஆண்டாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். 

இந்த விஷயம் தெரிந்த விக்டர், சரண்யாவிடம் அடிக்கடி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சரண்யா தான் திருமணமானவர் என்றும், தனக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது என்றும் சொல்லி மறுத்துள்ளார். ஆனால், விடாமல் விரட்டி விரட்டி காதல் தொல்லை கொடுத்து வந்த விக்டர், திருமணமானாலும் பரவாயில்லை நான் காதலித்துகொண்டு தான் இருப்பேன், என சொல்லி தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அவரில் தொல்லையிலிருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல், நீ எனக்காக 5 வருஷம் காத்திருந்தால், உனது காதலை ஏற்கிறேன் என்று சரண்யா கூறியுள்ளார்.  இதற்கிடையில் கடந்த 1 மாதத்திற்கு முன், சரண்யா தனது கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனாலும், விக்டர்  காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். 

விக்டரின் தொல்லை தாங்காமல் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மேல் அதிகாரியிடம் சரண்யா புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து விக்டரை கடந்த 5 நாட்களுக்கு முன் வேலையை விட்டு நிர்வாகம் நீக்கியிருக்கிறது. இதனால் கோபமடைந்த விக்டர் நேற்று பிற்பகல் சரண்யாவிடம், ‘’மரியாதையாக என்னை காதலித்துவிடு, இல்லையென்றால் உன்னை கொன்றுவிடுேவன் என மிரட்டியுள்ளார். அதற்கு சரண்யா, ‘’எனக்கு காதல் தொல்லைக்கு கொடுக்காதே, நான் இப்போது எனது கணவனுடன்  வாழ்ந்து வருகிறேன்’’ என்று கெஞ்சியுள்ளார். 

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த விக்டர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரண்யாவை கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சரண்யா ரத்த வௌ்ளத்தில் துடி துடித்து கீழே விழுந்த சரண்யா வலியால் அலறியிருக்கிறார். தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், படுகாயமடைந்த சரண்யாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும்   அதே பகுதியில் பதுங்கியிருந்த விக்டரை கைது செய்தனர்.

click me!