நாயை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்.. பூங்காவில் வைத்து பலாத்காரம்.. வெளியான வீடியோ..!

Published : Feb 27, 2023, 10:27 AM IST
நாயை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்.. பூங்காவில் வைத்து பலாத்காரம்.. வெளியான வீடியோ..!

சுருக்கம்

தலைநகர் டெல்லியில் சமீப காலமாக பெண் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் தற்போது பூங்காவில் வைத்து நாயை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்யும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் டெல்லியில் சமீப காலமாக பெண் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் தற்போது பூங்காவில் வைத்து நாயை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்யும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் டெல்லியின் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவில் தெருநாயை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அந்த வாலிபருக்கு தெரியாமல்  ஒருவர் செல்போனில் வீடியோவா பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இந்த சம்பவத்திற்கு சமூக நல ஆர்வலர்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் அந்த காமக்கொடூரனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு