ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டுங்கள்! உள்ளாடையையும் கழட்டுங்கள்... ஹாஸ்டல் மாணவிகளை செக் பண்ணிய ஹாஸ்டல் வார்டன்கள்...

By sathish kFirst Published Apr 30, 2019, 10:34 AM IST
Highlights

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரபல யுனிவர்சிட்டி ஹாஸ்டல் ஒன்றில்  500 மாணவிகளை, டிரெஸ் கழட்ட சொல்லி, ஹாஸ்டல் வார்டன்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரபல யுனிவர்சிட்டி ஹாஸ்டல் ஒன்றில்  500 மாணவிகளை, டிரெஸ் கழட்ட சொல்லி, ஹாஸ்டல் வார்டன்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபி மாநிலத்திலுள்ள பிரபல யுனிவர்சிட்டி ஹாஸ்டலில் 500 மாணவிகள் தங்கியுள்ளனர். இதில், யாரோ ஒரு மாணவி பயன்படுத்திய நாப்கின்னை டாய்லெட்டில் போட்டுவிட்டாராம். இதனால் டாய்லெட்டில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஹாஸ்டல் வார்டன்கள் 4 பேர், மாணவிகள் அனைவரையும் அழைத்து ஒன்றாக நிற்கச் செய்துள்ளனர். நாப்கின்னை டாய்லெட்டில் போட்டது யார் எனக் கேட்டு, அவர்களை மிரட்டியுள்ளனர். 

இந்த தவறை செய்ததற்காக, மாணவிகள் அனைவரையும் டிரெஸ்ஸை கழட்ட சொல்லியுள்ளனர். வேறு வழியின்றி, ஒவ்வொரு மாணவியாக, கழட்ட நேரிட்டுள்ளது. அதுமட்டுமல்ல உள்ளாடைகளை கழட்ட சொல்லியிருக்கிறார்கள். மாணவிகளும் வேறு வழியின்றி கழட்டியிருக்கிறார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவிகள், ஹாஸ்டலில் உள்ள தோழிகளிடம் சொல்லி அழுதுள்ளார்.

இச்சம்பவம் ஹாஸ்ட்டல் மற்றும் யூனிவர்சிட்டி முழுவதும் தெரியவந்ததும், மற்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தினர்.  இது சாதாரண சம்பவம் என மறுப்பு தெரிவித்த யுனிவர்சிட்டி நிர்வாகம், தற்போது, அந்த 4 வார்டன்களையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

click me!