ரத்தவெள்ளத்தில் பிரபல ரவுடி மர்ம மரணம்..! சேலத்தில் பரபரப்பு..!

By Manikandan S R SFirst Published Oct 5, 2019, 3:09 PM IST
Highlights

சேலம் அருகே பிரபல ரவுடி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

சேலம் அருகே இருக்கும் உடையாபட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் சரத்குமார். வயது 24. இவர் மீது குற்ற வழக்குகள் பல அம்மாபேட்டை, வீராணம் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கின்றன. காவலர்கள் வைத்திருக்கும் ரவுடிகள் பட்டியலிலும் சரத்குமார் பெயர் இடம்பெற்றிருக்கிறது.

இவர் வீட்டின் அருகே இருக்கும் ரயில் நிலையத்தில் இன்று காலை சிலர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கே சரத்குமார் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பதறியடித்து வந்த உறவினர்கள் சரத் குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அந்த பகுதியில் இருப்பவர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். சரத்குமாரின் உடலை மீட்ட அவர்கள், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். குடிபோதையில் ரயிலில் அடிபட்டு இருந்தாரா? அல்லது யாரரெனும் அடித்து கொன்றார்களா? என விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே சேலம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர் ஏத்தாப்பூர் ரயில்நிலையம் அருகே ஒருவர் ரயிலில் அடிபட்டதாக தகவல் தெரிவித்தார். அடிபட்டது சரத்குமாராக இருக்கும் என்று காவலர்கள் சந்தேகிக்கின்றனர். இது சம்பந்தமாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் இருக்கும் நிலையில், பிரபல ரவுடி மர்ம முறையில் இருந்திருப்பது அந்த பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!