சிறுமியை வாயை பொத்தி பலாத்காரம் செய்த பள்ளி மாணவன்.. வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டல்..!

By vinoth kumarFirst Published May 31, 2021, 6:22 PM IST
Highlights

12ம் வகுப்பு மாணவன் சிறுமியிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12ம் வகுப்பு மாணவன் சிறுமியிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுமியின் தாய் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சிறுமி, விநாயகபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 13ம் தேதி சிறுமியின் பாட்டி, அப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்ய சென்றார். உடன் சிறுமியும் சென்றார். 

அப்போது, சிறுமி விளையாடி கொண்டிருந்தபோது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 16 வயது மாணவன் சிறுமியை நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், வாயை பொத்தி சிறுமியை பலாத்காரம் செய்தார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து தன் பாட்டியிடம் அழுதபடி கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பாட்டி இதுதொடர்பாக செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து அந்த மாணவனை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

click me!