ஆட்டோ டிரைவரை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற 2 பேர்! பொதுமக்கள் இருந்து யாருமே காப்பாற்றாத கொடுமை!!

By sathish kFirst Published Sep 29, 2019, 11:03 AM IST
Highlights

பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுனர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார் அதேபோல் கட்டிட வேலைக்கும் சென்று வருவதாக சொல்லப்பட்டது. இவர் சரவணம்பட்டியில் இருந்து கோவில்பாளையத்திற்கு வாடகைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அங்கு கோவில்பாளையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு வரும் வழியில் ஆட்டோவின் பின்னே இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவருக்கும் அருண்பிரசாத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆட்டோவில் வழி விடுவதில் பிரச்சனை ஏற்பட்டதால், இந்த பிரச்சனையானது வாக்குவாதமாக முற்றியதையடுத்து அருண் பிரசாத்தை ஆட்டோவை நிறுத்த அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால் அருண் பிரசாத் நிற்காமல் சென்றதால்  ஆட்டோவை வழிமறித்து நிறுத்திய அவர்கள் எந்தவித பேச்சு பேச்சுவார்த்தையும் நடத்தாமல் சரமாரியாக அடிக்க ஆரம்பித்துள்ளனர். 

பின்னர் அருகில் கட்டிடம் ஒன்றின் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த நிலையில் அங்கு கட்டிடப் பணிகளுக்காக சிமெண்ட் கலவையை கலக்க வைக்கப்பட்டிருந்த கரண்டியை எடுத்து சரமாரியாக நெஞ்சிலும் தலையிலும் கொடூரமாக குத்தியும், கழுத்தில் வெட்டியுள்ளார். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள அன்னூர் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சாலையில் உள்ள பேக்கரி ஒன்றில் கூட்டமாக மக்கள் இருந்தும் யாரும் இந்த சண்டையை தடுக்க வில்லை என்பது தான் கொடுமையான விஷயம்.

இந்நிலையில், சரமாரியாக வெட்டப்பட்ட அருண்பிரசாத் வழியால் துடிதுடித்த நிலையில் பேக்கரியில் அமர வைத்து தண்ணி கொடுத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தப்பிச் சென்ற நிலையில் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!