எய்ட்ஸ் நோயாளி எனத் தெரிந்தும் இளம் பெண்னை கற்பழித்த காமக் கொடூரன்… மும்பையில் பயங்கரம் !!

Published : May 15, 2019, 11:59 PM IST
எய்ட்ஸ் நோயாளி எனத் தெரிந்தும் இளம் பெண்னை கற்பழித்த காமக் கொடூரன்… மும்பையில் பயங்கரம் !!

சுருக்கம்

மும்பையில் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கொடூரமாக கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள  லோகமான்யா திலக் முனிசிபல் ஜெனரல்  மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பெண் ஒருவர்  சிறுநீரக கோளாறு காரணமாக, சிகிச்சை பெற்று வருகிறார். 

அவருடன் 37 வயதான அவரது சகோதரி கூட இருந்து கவனித்து வருகிறார். இந்தப் பெண் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், அந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு தூக்கிச்  சென்று, கடந்த வெள்ளிக்கிழமை இரவு  கற்பழித்துள்ளார். இதனால் அதிர்ந்து போன  பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து பெண்ணை கற்பழித்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அதில் மருத்துவமனையில் உள்ள செக்யூரிட்டி பாதுகாப்பையும் மீறி, உள்ளே நுழைந்த அந்த நபர், வார்டு பாய் போல நடித்து, குறிப்பிட்ட பெண்ணை, எச்ஐவி சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, மேல்மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கே வைத்து, பலாத்காரம் செய்து விசாரணையில்  தெரியவந்துள்ளது.

 

அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டபோது தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று  அழுதுகொண்டே கூறியுள்ளார்.  ஆனாலும் அந்த இளைஞர் விடாமல் கற்பழித்துள்ளார்.இதையடுத்து அந்த இளைஞரை  போலீசார் தற்போது எய்ட்ஸ் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Breaking: தூத்துக்குடி மாணவி கொ**லை வழக்கு..! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடிa
ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!