
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 100க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 1,146 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,051 ஆக குறைந்துள்ளது. 82,053 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,051 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 238 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 7 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,977 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 5 பேரும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 20,681 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 3,561 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 33,87,839 ஆக உள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 188 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 157 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 102 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 96 ஆக குறைந்துள்ளது. ஈரோடு 55, திருப்பூர் 46, சேலம் 39, திருவள்ளூர் 41, திருச்சி 34, காஞ்சிபுரம் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.