இன்று 3 ஆயிரத்துக்கும் மேல் பதிவு.. குறையாத கொரோனா.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

By Thanalakshmi VFirst Published May 1, 2022, 9:32 AM IST
Highlights

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,324 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,79,188 ஆக உயர்ந்துள்ளது.     நேற்று 3,688 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் இன்று சற்று குறைந்து 3,324 ஆக பதிவாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 2,876 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,36,253 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பினால் 19,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04 % ஆக உள்ளது.

தினசரி தொற்று பரவல் விகிதம் 0.71 % ஆகவும் வாராந்திர தொற்று பரவல் விகிதம் 0.63 % ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,23,843 ஆக உள்ளது. நாட்டில்  கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் விகிதம் 1 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 189.17 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 25,95, 267 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 

click me!