மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 7,240 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

Published : Jun 09, 2022, 10:26 AM IST
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 7,240 பேருக்கு  தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

சுருக்கம்

இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 4,518 ஆக இருந்த நிலையில், இன்று 7,240 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,97,522 ஆக பதிவாகியுள்ளது.  

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,240 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,97,522 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 4,518 ஆக பதிவான நிலையில் இன்று 7,240 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா:

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 3,591 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,40,301 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.71 சதவீதமாக உள்ளது. 

7 ஆயிரத்தை கடந்த கொரோனா:

தற்போது கொரோனா பாதிப்பினால் 32,498 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.08 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,723 ஆக உள்ளது. நாட்டில் உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 194.59 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,43,748 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TN Corona: தமிழகத்தில் இன்று 195 பேருக்கு கொரோனா… 101 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?
குட் நியூஸ்!.. கொரோனா தொற்று இனி அவசரநிலை கிடையாது.. WHO வெளியிட்ட சூப்பர் தகவல்