குறையாத கொரோனா.. ஒரே நாளில் 3,275 பேருக்கு தொற்று.. இன்றையை பாதிப்பு நிலவரம்..

By Thanalakshmi VFirst Published May 5, 2022, 10:35 AM IST
Highlights

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,275 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,275 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,91,391 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3,205பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் இன்று சற்று அதிகரித்து 3,275 ஆக பதிவாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 3,010 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,47,699 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பினால் 19,719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05 % ஆக உள்ளது.

தினசரி தொற்று பரவல் விகிதம் 0.77 % ஆகவும் வாராந்திர தொற்று பரவல் விகிதம் 0.78 % ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,23,975 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 189.63 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,23,430 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 83.93 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

click me!