பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் காதலிக்காக மஹத் செய்த செயல்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By manimegalai aFirst Published Aug 28, 2018, 11:34 AM IST
Highlights

பிக்பாஸ் வீட்டை விட்டு மஹத் வெளியேறியது, பலருக்கும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் வெளியேற முக்கிய காரணம் ஐஸ்வர்யா, மற்றும் யாஷிகா என்பதால் பலரது கோபமும் இவர்கள் மேல் திரும்பியுள்ளது. இவர்களது செய்கைகள் குறித்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டை விட்டு மஹத் வெளியேறியது, பலருக்கும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் வெளியேற முக்கிய காரணம் ஐஸ்வர்யா, மற்றும் யாஷிகா என்பதால் பலரது கோபமும் இவர்கள் மேல் திரும்பியுள்ளது. இவர்களது செய்கைகள் குறித்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலரும், மஹத் உண்மையில் நல்லவர் தான், சில விஷமிகளின் தூண்டுததால் இப்படி நடந்துக்கொண்டார் என்றே தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் இரண்டாவது சீசன் காதலர்கள் என்று கூறப்பட்டு வந்த மஹத்-யாஷிகா இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். மஹத் காதலிக்கிறார் என்றே தெரிந்தும் யாஷிகா மஹத் மீது உள்ள காதலை வெள்ளிப்படுதினார். பின் மஹத் யாஷிகாவின் காதலை ஏற்றுக்கொண்டார் என்பதும் அனைவரும் அறிந்தது தான். 

மஹத் வீட்டிற்குள் போகும் போதே தனக்கு காதலி இருக்கிறாள் என்று மக்களுக்கு தெரிவித்துவிட்டு தான் சென்றார். திடீரென்று அவர் வீட்டிற்குள் யாஷிகா மீது காதல் என்று சொன்னதும் அவருடைய காதலி பிராச்சி, மிகவும் மன வேதனையுடன் மஹத்தை பிரிந்துவிட்டதாக ஒரு பதிவு போட்டார், பின் அதை நீக்கினார்.

தற்போது வீட்டைவிட்டு வெளியேறிய மஹத் பிக்பாஸில் போட்ட குறும்படத்தை இன்ஸ்டகிராமில் பதிவிட்டு இந்த உலகத்தில் உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என பிராச்சி பெயரை பதிவிட்டுள்ளார்.

உள்ளே இருக்கும் போது யாஷிகாவை காதலிப்பதாக கூறிய இவர் வெளியேறியதும் பிராச்சி பெயரை கூறியுள்ளது ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது... இதனால் பலர் இவரிடம் நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 

 

click me!