ஆதார் துறையில் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இங்கே !!

Published : Sep 15, 2022, 05:48 PM IST
ஆதார் துறையில் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இங்கே !!

சுருக்கம்

இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) கீழ் ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் (NISG) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.   

நிறுவனத்தின் பெயர்: UIDAI

காலி பணியிடங்கள்: பல்வேறு இடங்கள் காலியாக உள்ளன. 

பணியின் பெயர்: Manager

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை    

அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் சமர்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:ரூ. 1.80 லட்சம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்..

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech / BBA / BCA / MCA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 8 முதல் 12 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.22 லட்சம் ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் படிக்க:NIEPMD தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ.44,000 சம்பளத்தில் அரசு பணி.. விவரம் இங்கே
 

PREV
click me!

Recommended Stories

"படிக்கிறது ஒரு IIT-ல.. டிகிரி வாங்குறது வேறொரு IIT-ல!" - மத்திய அரசின் மாஸ் பிளான்!
மாதம் ₹9,000 வரை உதவித்தொகை! மாணவர்களுக்கு லக்! - மத்திய பட்ஜெட்டில் ஒளிந்திருந்த அந்த 'ரகசிய' திட்டம்!