காலியாக உள்ள 3,552 காவலர் பணியிடங்கள்.. எப்போது விண்ணப்பிக்கலாம்..? தகுதி , வயது வரம்பு குறித்து முழு விவரம்

Published : Jul 29, 2022, 06:01 PM IST
காலியாக உள்ள 3,552 காவலர் பணியிடங்கள்.. எப்போது விண்ணப்பிக்கலாம்..? தகுதி , வயது வரம்பு குறித்து முழு விவரம்

சுருக்கம்

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட காலியாக உள்ள 3,552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு  விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடைகிறது.   

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட காலியாக உள்ள 3,552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு  விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடைகிறது. 

மேலும் படிக்க:1089 காலி பணியிடங்களுக்கு தேர்வு ..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? டிஎன்பிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு

மேலும் இந்த பணியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் மொத்த காலிப்பணியிடங்களில் 10% இடங்களில் விளையாட்டு பிரிவில் கீழ் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்குரிய பணியிடங்களில் 3% ஆதரவற்ற விதவைகளுக்கு (Destitute Widow) ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: குடிமகன்களுக்கு ஷாக்!! 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடை மூடல்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு..

இருப்பினும், இந்த  ஆட்சேர்ப்பில்  துணை ராணுவப்படை வீரர்களுக்கு அளித்து வந்த சிறப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு நீக்கியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வேலை தேடுபவர்களே உஷார்! உங்கள் ரெஸ்யூமை AI நிராகரிக்கிறதா? 'Innovation' பெயரில் நடக்கும் பாரபட்சம்!
இன்டர்வியூ டிப்ஸ்: "பழைய வேலையை ஏன் விடுகிறீர்கள்?" என்று கேட்டால் இப்படி பதில் சொல்லுங்கள் - வேலை நிச்சயம்!