தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் - தேர்வு எப்போது? முழு விவரம்!

Ansgar R |  
Published : Sep 16, 2023, 06:22 PM ISTUpdated : Sep 16, 2023, 06:23 PM IST
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் - தேர்வு எப்போது? முழு விவரம்!

சுருக்கம்

Tamil Nadu Uniformed Services Recruitment Board எனப்படும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள், மற்றும் தீயணைப்பாளர்கள் பதவிகளுக்கான நேரடித் தேர்வுகள் குறித்த தகவலை சென்ற ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.

இந்நிலையில் மேற்குறிய பதவிகளுக்கான தேர்வுகள் குறித்த தேதிகள் வெளியாகியுள்ள நிலையில், நாளை செப்டம்பர் 17ம் தேதி, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இந்த இணைய பகுதிக்கு சென்று அப்ளை செய்யலாம்.

மொத்த காலிப் பணியிடங்கள்

இரண்டாம் நிலை காவலர் (மாநகர்/மாவட்ட ஆயுதப்படை), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு ஆயுதப்படை) இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர்கள் என மொத்தம் 3,359 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 2,576 பணியிடங்கள் ஆண்களுக்கும்ம், 783 பணியிடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பள விவரம்

மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதிய விகிதம் ரூ.18,200 - ரூ.67,100 என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01-02-2023 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினு, சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வேலை இல்லாதவர்களுக்கு 11,000 ரூபாய் ஊக்கத்தொகை.. தமிழக அரசின் இந்த திட்டம் தெரியுமா.? முழு விபரம் இதோ !!

PREV
click me!

Recommended Stories

TN TRB Assistant Professor: தேர்வர்களே அலர்ட்.. வெளியானது உதவி பேராசிரியர் தேர்வு ஹால் டிக்கெட்! டவுன்லோட் லிங்க் இதோ!
Free Training: லட்சங்களில் வருமானம் தரும் தேன்.! 7 நாள் இலவச பயிற்சி! மிஸ்பண்ணாதிங்க.!