தூத்துக்குடி ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

By Narendran SFirst Published Mar 20, 2023, 10:45 PM IST
Highlights

தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

பணிகள்: 

  • அலுவலக உதவியாளர்
  • இரவுக்காவலர் 

காலிப்பணியிடங்கள்:

  • அலுவலக உதவியாளர் - 02
  • இரவுக்காவலர் – 01

மொத்தம் - 03

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்

தகுதிகள்: 

அலுவலக உதவியாளார் பணி:

  • இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

  • ரூ.15,700 - ரூ.50,000 / மாதம்

இரவுக்காவலர் பணி:

  • இதற்கு விண்ணப்பிக்க எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

  • ரூ.15,700 - ரூ.50,000 / மாதம்

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களுக்கு 01.07.2022- இன் படி பொதுப்பிரிவினர் 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 
  • பழங்குடியின பிரிவினர் / ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று, பற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் ஆகியவையுடன் என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும். 

முகவரி :
ஆணையாளர்,
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்,
புதுக்கோட்டை-528103
தொலைபேசி எண் : 0461-2271222

கடைசி தேதி: 

  • 07.04.2023
click me!