சென்னை மாநகராட்சியில் பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் உட்பட 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள். உடனே விண்ணப்பிக்கவும்.
சென்னை மாநகராட்சி தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம், மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவி பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் உட்பட 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலிப்பணியிட விவரங்கள் மற்றும் சம்பளம்:
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.chennaicorporation.gov.in) தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2025
முகவரி:
உறுப்பினர் செயலாளர்,
நகர நலவாழ்வு சங்கம்,
பொது சுகாதாரத் துறை,
ரிப்பன் கட்டிடம்,
சென்னை - 600003
மேலும் விவரங்களுக்கு:
சென்னை மாநகராட்சி இணையதளம்: www.chennaicorporation.gov.in
தொலைபேசி எண்கள்: 044-2561 9339, 044-2561 9209
இதையும் படிங்க: TNPSC அதிரடி: 90 நாளில் இத்தனை பேர் தேர்வா?