இந்தியாவின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு நகர்ப்புற உயரடுக்கை சார்ந்த சேவைகளை விட ஆழமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். சீன நிறுவனங்கள் மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது போல், இந்திய ஸ்டார்ட்அப்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு குறித்து வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கவலை எழுப்பியுள்ளார். இது நகர்ப்புற உயரடுக்கை சார்ந்தவர்களுக்கு மட்டுமே சேவை செய்யும் வசதி சார்ந்த சேவைகளை விட ஆழமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த தொழில்முனைவோருக்கு சவால் விடுவதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட்அப் மஹாகும்ப் 2025-ல் பேசிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், உணவு மற்றும் மளிகை விநியோகத்தில் கவனம் செலுத்தும் இந்திய ஸ்டார்ட்அப்களுக்கும், மின்சார இயக்கம் போன்ற துறைகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கும் சீன நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பீடுகளை எடுத்துரைத்தார்.
சீனாவின் Startup நிறுவனங்கள்:
இந்தியாவின் ஸ்டார்ட்அப் லட்சியங்கள் "டெலிவரி சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை" உருவாக்குவதற்கு மட்டும பயன்படுத்தப்பட வேண்டுமா அல்லது நாடு உயர்ந்த இலக்கை அடைய வேண்டுமா என்று கோயல் தனது நேர்மையான உரையில் கேள்வியை எழுப்பினார். சீன ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மின் தொடர்பான சாதனங்கள் தயாரிப்பு மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்களில் எவ்வாறு அதிக முதலீடு செய்கின்றன, அவை உலகளாவிய மின்சார சுற்றுச்சூழல் அமைப்பில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது குறித்து பியூஸ் கோயல் சுட்டிக்காட்டினார்.
AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு கேட்ட நிகில் காமத்! வைரல் வீடியோ!
நாம் டெலிவரி சிறுவர்கள் மற்றும் சிறுமிகளா?
அவர் தொடர்ந்து பேசுகையில், "இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செய்வதை பார்த்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், ஆனால் நாம் இன்னும் உலகில் சிறந்தவர்களா? என்று கேட்டால் இன்னும் இல்லை. நாம் அப்படி இருக்க விரும்ப வேண்டுமா, அல்லது டெலிவரி சிறுவர்கள் மற்றும் சிறுமிகளாக மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோமா?
ஆடம்பரப் பொருட்கள் vs டீப் டெக்
கோடீஸ்வரர்களின் குழந்தைகளால் நிறுவப்பட்ட சில Startup நிறுவனங்கள் "ஆடம்பரமான ஐஸ்கிரீம்கள் மற்றும் குக்கீஸ்'' போன்ற ஆடம்பர உணவுப் பொருட்களில் கவனம் செலுத்துகின்றன. இவர்களது வெற்றியை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆனால், இவை எல்லாம் இந்தியாவின் தொழில்நுட்ப விதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.
The Startup India Initiative: உங்கள் ஸ்டார்ட் அப்பை எவ்வாறு பதிவு செய்வது! முழுமையான தகவல்கள்!
செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு Startup எங்கே?
எனக்கு இவற்றில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சைவ உணவுகளில் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால், இதற்கு மாறாக மற்ற நாடுகள் செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைத்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேன். பல நாடுகள், Chips, AI மாடல்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நமக்கு ஏதுவானவற்றில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, இதுபோன்ற துறைகளில் நமது கவனம் இருக்க வேண்டும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்:
விரைவான வர்த்தக ஏற்றத்தைப் பற்றிப் பேசுகையில், பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பட்டியலிடப்பட்ட இந்த வணிகங்களுக்கு தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும், வெளிநாட்டு மூலதனத்தை பெரிதும் நம்புவதற்குப் பதிலாக, அவர்களிடம் அதிகமான இந்திய முதலீட்டாளர்கள் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக கோயல் குறிப்பிட்டார்.
நமது அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் வெளிநாட்டினர் வாங்குவதை விட, அவர்களிடம் அதிகமான இந்திய முதலீட்டாளர்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு அதிக தேவை.
AI, Machine learning:
சர்வதேச போட்டியாளர்கள் "ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன், AI, Machine learning" ஆகியவற்றில் முதலீடு செய்வதோடு, உலகளவில் போட்டியிட உதவும் மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவின் புதிய சிற்பிகள் - பியூஸ் கோயல்:
ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் "புதிய இந்தியாவின் சிற்பிகளாக" உள்ளனர். விக்ஸித் பாரத் 2047 -ன் தொலைநோக்கை அடைய நாம் அதிகமாக சிந்திக்க வேண்டும். நாம் உலக அளவில் செல்வதற்கு அதிகமான உத்திகளை கண்டறிய வேண்டும்.
தொழில்நுட்ப சூழலில் இந்தியாவில் சுமார் 1,000 ஸ்டார்ட்அப்கள் மட்டுமே உள்ளன.
பிரதமர் மோடி ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுடன் ஒப்பந்தம்:
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களுடன் இந்தியா சிறியதாக பெரிய இலக்குகளை அடைந்து வருகிறது. ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களுடன் ஒப்பந்தங்களைத் தொடர்கிறது. உலகின் சிறந்தவற்றுடன் போட்டியிடுவதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்'' என்றார் பியூஸ் கோயல்.