கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் அதிகம். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது.
இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,543 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,532 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,256 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 88 ரூபாய் அதிகரித்து 36,344 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.30 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,500 அதிகரித்து 67,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.