
தங்கம் விலை கடந்த இரு நாட்களாக சரிந்தநிலையில் தொடர்ந்து 2வது நாளாக விலை உயர்ந்துள்ளது. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.200க்கு மேல் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,805க்கும், சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது.
தங்கம் விலை வியாழக்கிழமை(இன்று) காலை அதிரடியாக அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் ஏற்றம் கண்டு, ரூ.4,830 ஆகவும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ரூ.38,640ஆகவும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4830ஆக விற்கப்படுகிறது.
கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை குறைந்திருந்தது. ஆனால், கடந்த நேற்றும், இன்றும் தங்கத்தின் விலையில் உயர்வு காணப்படுகிறது. அமெரி்க்க பெடரல் வங்கியின் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 20 பைசா அதிகரித்து, ரூ.61.10 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.61,100க்கும் விற்கப்படுகிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.