ஃப்ளிப்கார்ட் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை: சிறு வணிகர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

Published : May 21, 2025, 04:48 PM IST
Flipkart

சுருக்கம்

ஃப்ளிப்கார்ட் Monopoly யாக செயல்படுவதாகவும், இதனால் சிறு வணிகர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. AIOVA 2018 இல் புகார் அளித்ததைத் தொடர்ந்து, CCI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது 

 

இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் மீண்டும் ஒருமுறை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் Monopoly யாக செயல்படுவதாகவும், இதனால் சிறு வணிகர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்ததுள்ளது.

AIOVA 2018 இல் புகார் அளித்தது

ஃப்ளிப்கார்ட் மீது முதலில் AIOVA நவம்பர் 2018 இல் புகார் அளித்தது. ஃப்ளிப்கார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஃப்ளிப்கார்ட் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட் ஆகியவை தங்கள் ஆதிக்க நிலையைத் தவறாகப் பயன்படுத்தி சிறு வணிகர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

AIOVA இல்லாத நிலையிலும் வழக்கு தொடர்கிறது

இது தொடர்பான வழக்கில் புகார் அளித்த அமைப்பான அனைத்திந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் சங்கமான AIOVA ஆஜராகத போதிலும் நீதிமன்றம் விவசாணை நடத்தியது. புகார் அளித்த அமைப்பு இல்லாதது ஒரு பொருட்டல்ல, ஏனெனில் இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது மற்றும் பொது நலனுடன் தொடர்புடையது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

ஃப்ளிப்கார்ட்டின் வாதத்தை ஏற்காத நீதிமன்றம்

தங்கள் நிறுவனத்தால் பல சிறு வணிகர்கள் தேசிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக ஃப்ளிப்கார்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி சூர்யகாந்த், சில நேரங்களில் ஃப்ளிப்கார்ட் அளிக்கும் தள்ளுபடிகள் சந்தை சமநிலையை சீர்குலைத்து சிறு வணிகர்களை அழித்துவிடுகின்றன என்றும் முதலீடு தேவை, ஆனால் டிராகனின் வாயைப் போன்ற சக்திகளிடமிருந்து பாதுகாப்பும் தேவை எனவும் கூறினார்.

CCIயின் பங்கேற்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது

விசாரணையின் போது, போட்டி ஆணையத்தின் (CCI) பங்கேற்பை நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியது. CCI உத்தரவு பிறப்பித்த பிறகு அதன் பணி முடிந்துவிட்டது. அது ஒரு நீதித்துறை அமைப்பு, ஒவ்வொரு வழக்கிலும் அதன் பங்கேற்பு ஏன் அவசியம்? இதுபோன்ற நடைமுறை தொடர்ந்தால், ஒவ்வொரு வழக்கிலும் உயர் நீதிமன்றம் அல்லது பிற ஆணையங்களை இழுக்க வேண்டியிருக்கும், இது சரியல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது.

நன்னடத்தைச் சான்றிதழை ரத்து

இந்த வழக்கு மார்ச் 4, 2020 தேதியிட்ட NCLAT உத்தரவுடன் தொடர்புடையது, இதில் ஃப்ளிப்கார்ட் மீது CCI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 2018 இல் CCI ஃப்ளிப்கார்ட்டுக்கு வழங்கிய நன்னடத்தைச் சான்றிதழை இந்த உத்தரவு ரத்து செய்கிறது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?