SBI server down: நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி சர்வர் முடங்கின; பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் திணறல்!!

Published : Apr 03, 2023, 02:04 PM ISTUpdated : Apr 03, 2023, 02:32 PM IST
SBI server down: நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி சர்வர் முடங்கின; பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் திணறல்!!

சுருக்கம்

நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியின் சர்வர் இன்று காலை முதல் முடங்கி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து எஸ்பிஐ  வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நாட்டிலேயே பெரிய வங்கி சேவையாக இருக்கும் எஸ்பிஐ வங்கியின் நெட் வங்கி, யுபிஐ, யோனோ ஆப் ஆகியவற்றின் சர்வர்கள் முடங்கி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் வங்கிகளில் தங்களால் பணத்தை செலுத்த முடியவில்லை, எடுக்க முடியவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்து டவுன்டிடெக்டர் என்ற டிரேக்கர் வெளியிட்டு இருக்கும் தகவலில், ''இன்று காலை 9.19 மணி முதல் எஸ்பிஐ சர்வர் செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், இதேபோன்ற பிரச்சனை நேற்றும் வங்கி சர்வரில் இருந்ததாக கூறப்பட்டு இருக்கிறது. 

இதற்கு பதிலளித்து இருக்கும் எஸ்பிஐ வங்கி, ''நிதியாண்டின் இறுதி கணக்குகள் எடுக்கப்பட்டு வருவதால், சர்வர் டவுன் ஆகியுள்ளது. வாடிக்கையாளர்களின் கவலை புரிகிறது. ஆண்டு இறுதி கணக்குப் பணிகள் முடிந்த பின்னர் இன்று மாலை 4.30 மணிக்கு ஐஎன்பி/யோனோ/யோனோ லைப்/ யோனோ பிசினஸ்/ யுபிஐ ஆகியவை செயல்படத் துவங்கும். வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது புகாரில், ''@FinMinIndia @RBI, மார்ச் 31ஆம் தேதியில் இருந்து எஸ்பிஐ வங்கி சர்வர்கள் சரியாக செயல்படவில்லை. இன்று நான்காவது நாளாக காலை முதல் சைட்/ஆப் அனைத்தும் டவுன் ஆகி இருக்கிறது. இது வழக்கமான சைபர் அட்டாக்கா அல்லது எப்போதும் போல அச்சிதினா? எங்களுக்கு பதில் வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்று ஒரு வாடிக்கையாளர் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?