rahul: rahul ed: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு: ராகுல் காந்தி கைது செய்யப்படுவாரா?

Published : Jun 15, 2022, 08:39 AM IST
rahul: rahul ed: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு: ராகுல் காந்தி கைது செய்யப்படுவாரா?

சுருக்கம்

rahul : rahul ed:   நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்பி.ராகுல் காந்தி ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கப்பிரிவு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, திங்கள்கிழமையும், செவ்வாய்கிழமையும் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு நேரில் ஆஜராகினார். ராகுல் காந்தியிடம் நேற்று முன்தினம் 10 மணிநேரமும், நேற்று 8.30 மணிநேரமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு கண்டனம் தெரிவித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் தொண்டர்கள், அமாலக்கப்பிரிவு அலுவலலகம் அருகே போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அமாலக்கப்பிரிவு விசாரணைக்கு 3-வதுநாளாக ராகுல் காந்தி இன்றும் ஆஜராகஇருப்பதால், அவர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ அமலாக்கப்பிரிவுக்கென்ன!!!ராகுல் காந்தியை எந்தவிதமான வழக்கும் இல்லாமல் கூட  கைது செய்வார்கள். என்னைப் பொறுத்தவரை ராகுல் காந்தியை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை, ஏனென்றால் ஆதாரங்களே அவருக்கு எதிராக இல்லை. ராகுல் காந்திக்கு சமூகத்திலும், மக்கள் மத்தியிலும இருக்கும் நன்மதிப்பை கெடுக்கவே இந்த ஏற்பாடு.

ராகுல் காந்தியை துன்புறுத்தி,காங்கிரஸ் கட்சியை மோசமாக சித்தரிக்கவே மத்திய அரசு எடுத்துள்ள தந்திரமான முயற்சி.ராகுல் காந்திதொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார்ஆனால், அவரின் கேள்விகளுக்கு மத்திய அரசால் பதில் அளிக்க இயலவில்லை.அதனால்தான் அமலாக்கப்பிரிவை ஏவிவிட்டு அவரை அடக்கப் பார்க்கிறார்கள். நான் சொல்லவிரும்புவது, காங்கிரஸை அடக்கவும் முடியாது, ராகுல் காந்தி வளைந்து கொடுக்கவும் மாட்டார்” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே பாஜக தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தனியார் சேனலில் நடந்த விவாத நிகழ்ச்யில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகிவருகிறார். அவரை அமலாக்கப்பிரிவு கைது செய்யக்கூடும் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Gold Rate Today: இன்றைய தங்கம், வெள்ளி விலை இதுதான்.! தெரிஞ்சுகிட்டு நகை கடைக்கு போங்க.!
ஜனவரி 1 முதல்.. பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. வங்கிகளுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை