ரொம்ப ரொம்ப கம்மியான வாடகையில் வீடு.! 44 ஆயிரம் பேருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.! அசத்தும் டாடா.!

Published : Aug 02, 2025, 08:20 AM IST
building construction

சுருக்கம்

2020 கொரோனா பேரழிவின் போது வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப நேரிட்டதால், தென் மாநிலங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனைத் தவிர்க்க, டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் ரூ.1,341 கோடியில் 44,000 தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டுகிறது.

2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பேரழிவின் போது வெளிமாநில தொழிலாளர்கள் தங்குமிடமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை எதிர்கொண்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப நேரிட்டது. இதனால் தென்மாநிலங்களில் உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள் பாதிக்கப்பட்டன. இந்த அனுபவத்தை தவிர்க்கவே மத்திய அரசு குறைந்த வாடகை வீட்டு திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கியது.

தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான வீடு

மாநிலங்களில் தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் பூங்காக்கள் அதிகரிக்கும் நிலையில், தொழிலாளர்களுக்கான வசதியான மற்றும் பாதுகாப்பான வீடுகளும் அவசியமாகிவிட்டது. இதை உணர்ந்த பல முன்னணி நிறுவனங்கள், குறிப்பாக நகர்ப்புறங்களில், வீடுகளுக்கு முதலீடு செய்ய முன்வந்துள்ளன.

ஓசூரில் டாடாவின் பெரும் முயற்சி

 இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம், வெளிமாநில தொழிலாளர்களுக்காக, 1,341 கோடி ரூபாய் முதலீட்டில் 44,000 பேர் தங்கும் வகையில் அடுக்குமாடி வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளது. இது 64 ஏக்கர் நிலத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே தொடங்கிய திட்டம்

டாடா நிறுவனம் ஏற்கனவே 10,000 பேர் தங்கும் வகையில் வீடுகளை கட்டியிருக்கிறது. இப்போது அதனை விரிவுபடுத்தி, 56 லட்சம் சதுர அடியில் புதிய வீடுகளை கட்டவிருக்கிறது. குறைந்த வாடகையில் தொழிலாளர்களுக்கு இவை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் குடியிருப்பு சிக்கல்கள் தீர்க்கப்படுவதுடன், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி தொடர்ந்து நிலைத்திருக்கும். இதனால் மாநிலத்தின் தொழிற்துறை வளர்ச்சிக்கும் தூண்டுதல் கிடைக்கும் என்பது உறுதி. ஒரே நேரத்தில் சமூக நலனையும், தொழில் வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கும் அபூர்வ முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு