LIC: ரூ. 200 சேமித்தால் 28 லட்சம் பெறலாம்.. எல்ஐசியின் சூப்பர் ப்ளான்.. உங்களுக்கு தெரியுமா?

By Raghupati RFirst Published Mar 31, 2024, 1:15 PM IST
Highlights

எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தில், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கான ரிஸ்க் கவர் அதிகரிக்கிறது. பாலிசிதாரர் பாதியில் இறந்துவிட்டால், காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

எதிர்கால தேவைக்காக சேமிப்பது என்பது அனைவரும் செய்யும் ஒன்று. சம்பாதித்ததில் நிறைய சேமிக்க நினைக்கிறார்கள். இதற்கு பல வகையான திட்டங்கள் உள்ளன. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது எல்.ஐ.சி. இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. ஜீவன் பிரகதி பாலிசி பலருக்கும் உதவக்கூடிய ஒன்றாகும். எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தில், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கான ரிஸ்க் கவர் அதிகரிக்கிறது.

பாலிசிதாரர் பாதியில் இறந்துவிட்டால், காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். ஜீவன் பிரகதி பாலிசியின் காலம் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 20 ஆண்டுகள். 12 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்ச தொகை ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை. உதாரணமாக ஒரு நபர் ரூ. 2 லட்சம் பாலிசி வாங்கினால்... முதல் ஐந்து வருடங்களுக்கு அவர்களின் மரண பலன் சாதாரணமாக இருக்கும்.

6 முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கவரேஜ் ரூ. 2.5 லட்சம். மேலும் 10 முதல் 15 ஆண்டுகளில் கவரேஜ் ரூ. 3 லட்சமாக உயரும். இந்த திட்டத்தில் ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.200 முதலீடு செய்தார் என்று வைத்துக்கொள்வோம். இதன் மூலம் ரூ. 6000 முதலீடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து டெபாசிட் செய்தால் ஆண்டுக்கு ரூ. 72,000 முதலீடு செய்ய வேண்டும். இப்படி 20 வருடங்கள் முதலீடு செய்தால் மொத்த முதலீடு ரூ. 14,40,000 இருக்கும். நீங்கள் பெறும் அனைத்தையும் சேர்த்து பார்த்தால் மொத்தம் ரூ. 28 லட்சம் கிடைக்கும்.

ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..

click me!