inflation rate: ரெடியாக இருங்க மக்களே! அத்தியாவசியப் பொருட்கள் விலை 15% வரை உயர்கிறது

Published : Mar 21, 2022, 12:41 PM ISTUpdated : Mar 21, 2022, 12:42 PM IST
inflation rate: ரெடியாக இருங்க மக்களே! அத்தியாவசியப் பொருட்கள்  விலை 15% வரை உயர்கிறது

சுருக்கம்

inflation rate:கடந்த வாரத்தில் நெஸ்ட்லே நிறுவனம், இந்துஸ்தான் யுனிலீவர் லிமிட் நிறுவனத்தின் பொருட்கள் விலை 15 சதவீதம் வரை விலை உயர்ந்த நிலையில் அடுத்ததாக டாபர், பார்லி நிறுவனங்களும் விலையை உயர்த்த உள்ளன.

கடந்த வாரத்தில் நெஸ்ட்லே நிறுவனம், இந்துஸ்தான் யுனிலீவர் லிமிட் நிறுவனத்தின் பொருட்கள் விலை 15 சதவீதம் வரை விலை உயர்ந்த நிலையில் அடுத்ததாக டாபர், பார்லி நிறுவனங்களும் விலையை உயர்த்த உள்ளன.

விலை உயரும்

ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகமான விலை கொடுத்துவரும் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள், இனிவரும் நாட்களில் கூடுதலாக விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.

போர் 

உக்ரைன் ரஷ்யா இடையே நடந்துவரும்போரால் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கோதுமை இறக்குமதி, சமையல் எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பொருட்களைப் பேக்கிங் செய்வதற்கு பயன்படும் பிளாஸ்டிக்கின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், பேக்கிங் செலவுஅதிகரிக்கும். 

நெஸ்ட்லே, ஹெச்யுஎல்

இதனால், வேறுவழியின்றி நெஸ்ட்லே, இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் தங்கள் பொருட்களுக்கான விலையை உயர்த்திவிட்டன. அதன்வழியில் தற்போது டாபர், பார்லி நிறுவனங்களும் விலையை உயர்த்த உள்ளன.

விலை உயரும்

பார்லி நிறுவனத்தின் வர்த்தகப்பிரிவு மூத்த அதிகாரி மயங்க் ஷா செய்தி நிறவனத்துக்குஅளித்த பேட்டியில் கூறுகையில் “ சூழலைக் கவனித்து வருகிறோம். தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்துவருவதை எங்களால் தாங்க முடியவில்லை. ஆதலால், நாங்களும் 10 முதல் 15%வரை விலை உயர்த்துவோம். விலைவாசி தொடர்ந்து மாறி வருவதால், இந்த அளவுதான் விலைவாசியை உயர்த்துவோம் என குறிப்பிட்டு கூற முடியாது. 

பாமாயில் விலை லிட்டர் ரூ.180 ஆக உயர்ந்து தற்போது ரூ.150ஆகக் குறைந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை 140 டாலராகஇருந்தது, 100 டாலராகக் சரிந்துள்ளது. முன்புஇருந்த விலையைவிட உயரும் எவ்வளவு எனக் கூற முடியாது.உள்ளீட்டுச் செலவு அதிகரித்துவிட்டதால், நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலையில்தான் இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.

பணவீக்கம்

டாபர் இந்தியாவின் தலைமை நிதி அதிகாரி அன்குஷ் ஜெயின் கூறுகையில்  “ பணவீக்கம் தொடர்ந்துஅதிகமாக இருப்பதால், விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரிப்பால் பொருட்கள் விலை அதிகரி்க்கும், இதனால் நுகர்வோர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். சந்தைச் சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், பணவீக்கத்துக்கு ஏற்றார்போல் விலையை உயர்த்துவோம்” எனத் தெரிவித்தார்

எடில்வீஸ் நிதிச்சேவை துணைத் தலைவர் அபினீஷ் ராய் கூறுகையில் “ எப்எம்சிஜி நிறுவனங்கள் விலைவாசி உயர்வை மக்களுக்கு கடத்தத் தொடங்கிவிட்டன. இந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்டில் ஆகியவை விலையை ஏற்றிவிட்டன. அடுத்துதாக சில நிறுவனங்கள் குறைந்தபட்சம் 5% வரை விலை உயர்த்தலாம் எனஎதிர்பார்கிறோம்” எனத் தெரிவித்தார்

நெஸ்ட்லே நிறுவனம் தனது தயாரிப்பான மேகி நூடுல்ஸ் விலையை 9 முதல் 16 %வரை விலையை உயர்த்தியுள்ளது, பால்பவுடர், காபி பவுடர் விலையையும் நெஸ்ட்லே நிறுவனம் அதிகரித்துவிட்டது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?