3 லட்சத்திற்கு 3 லட்சம் அபராதம்.....!!! வருமானவரித்துறை அதிரடி ....!!!

Asianet News Tamil  
Published : Feb 06, 2017, 01:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
 3 லட்சத்திற்கு 3 லட்சம் அபராதம்.....!!! வருமானவரித்துறை அதிரடி ....!!!

சுருக்கம்

கருப்புப்  பணம் :

டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்தும் பொருட்டு,3 லட்ச ரூபாய்க்கு மேல், ரொக்க பரிவர்த்தனை செய்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என வருவாய் துறை தெரிவித்துள்ளது.

காலக்கெடு :  ஏப்ரல் 1

இந்த விதிமுறைகள், ஏப்ரல் 1-ம் தேதிக்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு பொருந்தும்  என என வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

என்ன  சொல்கிறது  இந்த விதி ...!

அதாவது  வரும் ஏப்ரல்  1  ஆம் தேதி முதல், 3 லட்சம் ரூபாய்க்கு மேல் , ரொக்க பரிவர்த்தனை செய்தால், அதே  அளவான  பணத்தை   அபராதமாக  விதிக்கப்படும்.அதாவது 4 லட்சம் கொடுத்து  ஒருவர் எதாவது  ஒரு  விலைமதிப்புள்ள  பொருளை  வாங்கினார் என்றால், அதே  நான்கு  லட்சம்  ரூபாயை  அபராதமாக  விதிக்கப்படும் என  இந்த புது விதி சொல்கிறது.

இதனால் என்ன லாபம் :

இந்த  நடைமுறை,  அமலுக்கு வந்தால்,  ரொக்க பரிவர்த்தனை  தடுக்கப்படும்,  கருப்பு  பண   பரிமாற்றம்  தடுக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் பொருந்தாது :

வங்கிகள், அரசு, தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த விதி பொருந்தாது  என  தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது  கூடுதல் விவரம் .

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

உங்கள் பெயரில் எத்தனை கடன்கள் இருக்கிறது தெரியுமா.? ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்
இந்த சாதாரண பொருள் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்க வைக்கும்! இந்த பிசினஸ் தெரியாம போச்சே