Aviation Fuel: விமான எரிபொருளில் எத்தனால் கலப்பா? மத்திய அரசு பரபரப்பு விளக்கம்!

Published : Aug 06, 2026, 05:41 PM IST
Aviation Fuel

சுருக்கம்

Aviation Fuel: விமான எரிபொருளில் (ATF) எத்தனால் கலக்க அரசு திட்டமிட்டுள்ளதான செய்தி முற்றிலும் பொய்யானது என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு மறுத்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பிற்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகவும் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டிற்கு அவர் பதிலளித்துள்ளார்.

விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூலில் (ATF) எத்தனால் கலக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை மற்றும் பொறுப்பற்றவை என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பான ஊடகச் செய்தி ஒன்றை டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்த நிலையில், இந்த சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விமான எரிபொருளில் எத்தனால் கலக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், எத்தனால் என்பதும், நிலையான விமான எரிபொருள் (Sustainable Aviation Fuel - SAF) என்பதும் முற்றிலும் வெவ்வேறானவை என்றும் அவர் விளக்கினார்.

மத்திய அமைச்சர் விளக்கம்

"விமான எரிபொருளில் எத்தனால் கலக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் பொய் மற்றும் பொறுப்பற்றத்தனம். அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை" என்று கிஞ்சராபு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "எத்தனாலையும், நிலையான விமான எரிபொருளையும் (SAF) போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை" என்றார்.

அமைச்சரின் கூற்றுப்படி, "SAF என்பது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பால் (ICAO) அங்கீகரிக்கப்பட்ட, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விமான எரிபொருள். இது கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உலகளாவிய பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்கிறது."

விமானப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது, தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் என்றும் கிஞ்சராபு எச்சரித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் சந்தேகம்

"விமானப் பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது, விமானப் பயணிகளிடையே தேவையற்ற கவலையை மட்டுமே உருவாக்கும். பயணிகளின் பாதுகாப்புக்குத்தான் அரசு எப்போதும் முதலிடம் கொடுக்கிறது," என்றார் அவர். முன்னதாக, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊடகச் செய்தி ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "கலப்பட விமான எரிபொருளின்" பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்த செய்தியை மேற்கோள் காட்டி கெஜ்ரிவால், "இதைப் படியுங்கள். நடுவானில் உங்கள் விமானத்தின் இன்ஜின் நின்றுவிடக்கூடும். கலப்பட விமான எரிபொருளில் இயங்கும் விமானத்தில் பறக்கத் துணிவீர்களா? படித்த மற்றும் திறமையான ஒரு அரசாங்கம் அமைய வேண்டிய நேரம் இது," என்று பதிவிட்டிருந்தார்.

ஜெர்ரிவாலுக்கு பதிலடி

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், விமான எரிபொருளில் எத்தனால் கலக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், SAF எரிபொருளை எத்தனாலுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்றும், அது சர்வதேச சான்றிதழ் மற்றும் பாதுகாப்புத் தரங்களைப் பின்பற்றுவதாகவும், பயணிகளின் பாதுகாப்பே அரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Petrol Price 1950: 76 வருஷத்துக்கு முன்னாடி பெட்ரோல் விலை எவ்ளோ தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
TN AGRI BUDGET: திராவிட கட்சிகள் செய்யாததை செய்தாரா விஜய்?! முதல் வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!