
ஒரு பணியாளர் நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தால், அவருக்கு கிராஜ்ஜூட்டி எனப்படும் பணிக்கொடை தொகை அல்லது கருணைத் தொகை சலுகை கிடைக்கும். அதாவது, நிறுவனத்தின் சார்பில் வெகுமதித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, பணியாளர்கள் ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். அதாவது, 2020 ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து 2025 இல் கிராஜ்ஜூட்டி வழங்கப்படும். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் வேலையை விட்டுவிட்டால், உங்களுக்கு இந்த சலுகை கிடைக்காது.
கிராஜ்ஜூட்டி-யைப் பற்றி பணியாளர்களின் மனதில் குழப்பம் நிலவுகிறது. இதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்!
அறிவிப்பு காலமும் கணக்கிடப்படுமா?
கிராஜ்ஜூட்டி விதிகளின்படி, கிராஜ்ஜூட்டிக்கு அறிவிப்பு காலமும் கணக்கிடப்படும். ஏனெனில் அறிவிப்பு காலத்திலும் அந்த பணியாளர் அந்த நிறுவனத்திற்கு தனது சேவைகளை வழங்குகிறார். அதாவது, ஒரு பணியாளர் 4 ஆண்டுகள் 10 மாத வேலைக்குப் பிறகு ராஜினாமா செய்தான் என்றார், இரண்டு மாத அறிவிப்பு காலத்தை வழங்கினால். அப்போது அது ஐந்து ஆண்டுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதன் அடிப்படையிலேயே கிராஜ்ஜூட்டி வழங்கப்படுகிறது.
IT Return | வருமான வரி ரீஃபண்ட் வரவில்லையா..? இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ணுங்க!
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கிராஜ்ஜூட்டி கிடைக்குமா?
சில சந்தர்ப்பங்களில், பணியாளருக்கு ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பே கிராச்சுட்டி சலுகை கிடைக்கும். விதிகளின்படி, 4 ஆண்டுகள் 8 மாதங்கள் வரை வேலை செய்யும் பணியாளர்கள் கிராஜ்ஜூட்டி சலுகையைப் பெறலாம்.
கிராஜ்ஜூட்டி சட்டம் 1972-ன் படி, பணியாளருக்கு விபத்து ஏற்பட்டாலோ, அல்லது அவர் இறந்துவிட்டாலோ அல்லது ஊனமுற்றவராகிவிட்டாலோ, இந்த சூழ்நிலையில் கிராஜ்ஜூட்டி வழங்கப்படும். இந்த சூழ்நிலையில், கிராஜ்ஜூட்டி தொகை நியமிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும்.
ஐடிஆர் பண்ணியாச்சு.. எவ்வளவு நாட்களில் பணம் வரும் தெரியுமா? வருமான வரி ரீஃபண்ட் குறித்த அப்டேட்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.